சுதந்திரக்கொடி பரக்குது பாரீர்? எங்கேஎன் நாடு வளர்கின்றது?

 சுதந்திரக்கொடி பரக்குது பாரீர்? எங்கேஎன் நாடு வளர்கின்றது?

75 வது ஆண்டிலும் சுதந்திரக்கொடி பரந்துகொண்டுதான் இருக்கின்றது.

சுதந்திரத்தை சுவைக்க நினைக்கும்பொழுது மனதிலே சஞ்சலம், ஏன்? நாம் சுதந்திரம் பெற்றோம்! மகிழிந்திருக்க, மனம் விட்டு பேச, மனம் விட்டு எழுத…. ஊரிமைக்குறலைக்கொடுக்க ஆனால் அனைத்தும் அரசு அடிப்பணிய வைத்து ஆட்டிப்படைக்கின்றது. சுதந்திரமாக இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் பதவி வைப்பவர்கள் மட்டும் தான் எனொன்றால் அது மிகையாகது எனினும் பாமரமக்களின் வருத்தமும் கொரிக்கைகளும் விண்ணப்பங்களும் எடுபடா சுழலில் எங்குதான் சுதந்திரம். சுதந்நதிரம் தினம் என்று 75 ஆண்டுகளில் இருந்தாலும் சுதந்திரமாக இருக்க நாம் நினைப்பது போதிய அடிப்படை உரிமைகளும் சலுகைகளும் அரசால் அதுகொடுக்கப்பட வேண்டும் அப்படிகொடுக்க முன்வராத அரசு எச்சூழலிலும் உரிமையை பரிக்கின்றதே தவிர அது முதலாளிகளின் கையில் தரைப்போய்விட்டது என்பதே கூற்று எடுபடா விவசாயிகளின் குரல், மாணவர்களின் குரல், பாமர மக்களின் குரல், என்று பல்வேறு தரப்பட்ட மக்கள் போராடினாலும் அரசு அதை அடக்கி ஆழுகிறதே தவிர மற்ற உரிமைகளை கொடுப்பதில்லை. காரணம் அனைத்திற்கும் விலை வைத்து அடித்தட்டுமக்களை வைத்தில் அடிக்கிறது. இதை மறைக்க சலுகைகளை இலவசம் என்ற பெயரிலும், விலையில்லா பொருட்கள் (விலைபோகும் பாமரர்களும் படித்தவர்களும்) என்று கொடுக்கும்போது வாங்கிதானே ஆகனும். ஆசை எவரை விட்டு வைத்தது. நோட்டுக்கு ஓட்டுப்போட்டு, ஒருத்தன உசத்துன அவன் வருகின்ற சலுகைகளை அவன் பக்கம் வைத்துக்கொண்டு கேட்பாரின்றி அவன் மனம் வைத்து செய்தால்தான் உண்டு இல்லையேல் மீண்டும் அப்பணத்தை இவ்வாறு பிடுங்குகின்றான் அவன் சேவை என்ற பெயரில் அவன் கடமையை செய்வதற்கு. நீ கொடுத்தால்தான் நான் கொடுப்போன் அல்லது கையொப்பம் இடுவேன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது: நான் 11 ம் வகுப்பு படிக்கும்போது கல்வி உதவித்தொகைப் பெறுவதற்காக கிரம நிர்வாக அலுவலகரை உதவித்தொகை விண்ணப்பத்துடன் உள்ளே சென்றேன் அவர் என் விவரங்களை கேட்டுவிட்டு யார் இவனை உள்ள விட்டது கிளர்க் என்று சத்தம் இந்த பையன் கவுனுச்சான? இல்ல சார். தம்பி நீ கொஞ்சம் வெளியே வெயிட் பன்றையா? சரிங்க சார். அந்த கிளர்க் 300 ரூபாய் கேட்டார் நான் இல்லை என்று கூறினோன். சிறிது நேரம் கழிந்து அவர் விண்ணப்பத்தைக் கொடுத்தார். அலுவலகர் கையொப்பம் இட்டார் அதில் எழுதப்பட்ட தொகைக்கு அதிகமாக இருந்ததினால் எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. எங்கே அந்த அலுவலகருடைய மனசாட்சியும் சேவையும் என்னைக் கேள்விக்குரியாக்கிவிட்டது. எனக்கு கோபம் வந்தது. பணமில்லாமல் ஒரு கையொப்பம் கூட வாங்கமுடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். நாம் சுதந்திர இந்தியாவில் தான் இருக்கின்றோம் ஆனால் பதவியில் இருப்பவர்கள் சுதந்திரமாக சட்டத்தையும் பணியினுடைய கடமைகளையும் மறந்து விட்டு செயல்படுகின்றார்களே!. இப்போது கொடு நான் கொடுக்கின்றேன்: வேலை, கையொப்பம், சலுகைகள், படிப்பு…எண்ணிலடங்கா வசூல். அரசியல் பணி ஏற்பின் போது உறுதி கூருகின்றார்கள் ஆனால் அவர்களுடைய உறுதிமொழியானது என்ன ஆயிற்று அதற்கு பிறகு. மக்களுக்கு நான் பணியாற்றுவேன் என்று முலக்கமிட்டவர் அதனை மறந்து செயல்படுகின்றறே!
நம் நாட்டின் வளர்ச்சி எப்படியிருக்கின்றது: அரசுடைமையாக்கப்பட்ட பலவற்றை தனியார் மையமாக்குதல் தான வளர்ச்சி? தனியாரிடம் கொடுத்துவிட்டு அரசு அதற்கு உண்டன தொகையை பெற்றுக்கொண்டு அமைதியாகிவிடுகின்றது. தனியார் அதற்கு விலை வைத்து மக்களிடம் வரியும் அதந்த பொருளுக்கான அல்லது சேவைக்காக அதிக பணம் வசூலிப்பது நாம் அறிந்ததே!. 
எரிப்பொருளின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேதான் செல்கின்றது தவிர குறைந்த பாடியில்லை. அனைத்துப்பொருட்களும் விலை ஏறிக்கொண்டேதான் செல்கின்றது தவிர குறைவதற்கு எந்த சாத்தியக்கூறுகள் இல்லை. விதிவிலக்கு விவசாயப்பொருட்கள் மட்டும் தான். 
சுதந்திரமா? சுகாதரமற்ற நிலை : எங்கே தூய்மை இந்தியா? கழிவறையில்லா அரசு பள்ளிகள் அப்படி இருந்தாலும் சுகாதரமற்றதாக இறுக்கின்ற நிலை, தூய்மையான குடிநீர் இல்லாத நிலை, பேருந்து நிலையத்தின் கழிவறைகள் காசு கொடுத்தாலும் சுகாதரமற்ற கழிவறைகள், மருத்துவமணைகள் சுகாதர நிலை, டாஸ்மார்க் சுகாதரநிலை எப்படி இருக்கின்றது அதனோடு இருக்கின்ற பார்கள் அசுத்தமற்றதாக காட்சி அழிக்கின்றதல்லவா? ஏன் கிராமங்கள் இன்னும் திறந்தவழிகழிவறைகள் தானே பயன்படுத்துகின்றார்கள், மாவட்டங்கள் எங்கே தூய்மையான இருக்கின்றன? சுமார்ட் சிட்டியாவது சுகாதரமான கழிவறைகளும் இடங்களும் இருக்குமா? வளர்ந்து வருகின்ற இந்தியா? மாடன் இந்தியா? டிசிட்டல் இந்தியா? எல்லாம் பொய் கனவே! ஆன்லைனில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் வகுப்புகள் பங்கு பெருவதற்கு இன்டர்நெட் இல்லை அவர்களுக்கு கைபேசியும் இல்லை, மின்சாரமும் இல்லை. நாம் எதிலே வளர்ச்சி அடைந்துள்ளோம் எல்லாம் வாய் வார்த்தைகளாகவே இருக்கின்றது. எல்லாத்திட்டங்களும் அரசு சொகுசான குளிர்சாதன அறையிலே அனைத்து வசதிகளுடன் அமர்ந்து திட்டமிடுவதால் கிராமத்தின் நிலை அவர்கள் அறிவதில்லை. எங்கே கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆன்லைன் தேர்வை எழுதினார்கள் கடினப்பட்டு எழுதிய தேர்வு தாள்களை அனுப்ப சரியான வசதியில்லாத சூழல்தான் காணப்படுகின்றது. 
முன்னேருவோம் வளர்ச்சியை நோக்கி: கருப்பு பணத்தை ஒழித்துவிடுவேன் என்றவர் வெள்ளைப்பணத்தில் சந்தோசமாக இருக்கிறார். எங்கே அந்த கருப்பு பணம்? அவர் பேசிய கருப்புபணம் எங்கே? எல்லாம் வெறும் வாய் வார்த்தைகள்தான். தேர்தலில் வெற்றிபெறுதே நோக்கமே தவிர செயல்பாட்டிக்கும் நடைமுறைக்கும் இல்லை. சுதந்திர இந்தியாவில் கருப்பு பணம் என்ன ஆயிற்று?

பிரதமர் கேர் என்று வசூலான பணம் எங்கே போனது சுதந்திர இந்தியாவில் கேள்விகள் கேட்பது தவறு ஏனொன்றால் அதற்கு சுதந்திரம் இல்லை. அவருக்கு பணம் வசூல் செய்ய சுதந்திரம் இருக்கின்றது.