கொரோனா வைரஸ் தோற்று காலத்திலே புதிதாய் திருமணமான தம்பதிகள் நிலை

ஒரே இடத்தில் தம்பதியர்கள் வகுப்பறைகள், அலுவலகம், சமையல், உறங்கும் அறை, ஆலயம் மற்றும் பொழுதுபோக்கு, வீட்டு வேலை என்ற நிலையில் அடங்கிக் கிடக்கும் நான்கு சுவருக்குள்ளே அவர்களுடைய வாழ்க்கை  நிலை இந்த கொரோனா வைரஸ் காலத்திலேயே அதிக நீடித்ததால் அவர்களிடையே அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் அன்பும் அதிகமாக இல்லாத ஒரு சூழல் அவர்களிடையே மன அழுத்தத்தை தந்து கொண்டு இருந்தது இதனால் அவர்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவுக்கு இரண்டாம் நிலையை கொடுத்து  வாழ்ந்து வருகின்ற ஒரு சூழலில்தான் இந்த கொரோனா காலகட்ட நிலை. தம்பதிகள் இருவருக்கும்  இடையேயான நேரம் மிகவும் சொற்பமே ஏனென்றால் இருவருமே வெவ்வேறு நேரங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறர்கள். வீட்டிலிருந்தே வேலை என்ற சூழ்நிலை அவர்கள் வேலைக்கு அடிமையாகி பல மணி நேரம் வேலை செய்து கொண்டே இருக்கின்ற ஒரு சூழலானது இந்த  காலகட்டத்திலேயே உறவுகளை கொரோனா  நோய்த்தொற்று வழியாக பிரிவு ஏற்பட்டிருக்கின்றது. தம்பதிகளுக்கான அந்த நேரத்தை செலவழிக்க செலவு செய்திட நீங்கள் முற்பட முன் வருகின்றீர்களா? மலரும் மண உறவு வார இறுதி இதிலே நீங்கள் பங்கு பெற்று நீங்கள் உங்களுடைய வாழ்வில் ஆன்மீக  புத்துணர்ச்சியையும் அன்பு  உறவு  வளர இருவருமாய் சேர்ந்து 
வார இறுதியை செலவிடும் பொழுது நீங்கள் உண்மையிலேயே ஒரு புது வாழ்வு பெற்றவர்களாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, ஒருவரை ஒருவர் முழுதுமாக புரிந்துகொண்டு அன்பு வாழ்வுக்கு அதிகமான நேரத்தை செலவழிக்க உங்களுக்கு இந்த மலரும் மண உறவு ஒரு வாய்ப்பு கொடுக்கின்றது. கடவுள் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்துகின்றார் உங்கள் துணை யின் வழியாக அந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார் நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு  மேலும் மேலும் வளர உங்களுக்கு இது ஒரு வாய்ப்பளிக்கிறது கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று வசனத்தை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம் வாசிக்க கேட்கின்றோம் இந்த வேலைப்பளுவின் வழியாக நமது பொருள்களின் வழியாக மற்றும் நமது சொந்த தேவைகளை தேடிச் செல்வது வழியாக நாம் உறவுக்கு முதலிடம் கொடுக்காமல் பொருளுக்கு முதலிடம் கொடுத்து நமது உறவை சரி செய்யாமல் விட்டு விடுகின்றோம் அன்பு ரவை புதிப்பிக்க  தம்பதிகளாக இணைந்து இந்த மலரும் மண உறவு வார இறுதியில் பங்கு பெறுங்கள் . உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது நீங்கள் அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள் ஏனென்றால் கடவுள் உங்களுக்கு மீண்டும் ஒரு ஆசீர்வாதத்தை இந்த கருத்தரங்கு வழியாக  கொடுக்கின்றார் நீங்கள் புத்துணர்வு பெற உங்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றது.
அருட்திரு. அருள்குமார் ச.ச

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Mother Annammal the inspirational story St Anne's

https://youtu.be/uFaQvsk2h7g