கிருஸ்து பிறப்பு விழா குழந்தை இயேசுவின் ஆசீருக்காக வீடுகளில் செபிக்கின்ற செபம்

 

கிருஸ்து பிறப்பு விழா குழந்தை இயேசுவின் ஆசீருக்காக

வீடுகளில் செபிக்கின்ற செபம்

 

குரு: தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - ஆமென்.

       ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

             உம் ஆன்மவோடும் இருப்பாராக

மன்றாடுவோமாக:

அன்பான இயேசுவே உம்மக்களாகிய எங்களுக்கு மபெரும் மகிழ்ச்சி ஊட்டும் நற்செய்தியாகவும் இம்மண்ணில் பிறந்த இயேசுவே, உமது திருப்பிறப்பை கொண்டாட இருக்கும் இந்த திருகுடும்பத்தை ஆசீர்வதித்தருளும். வானத்தூதர்கள் அறிவித்த அந்த சமாதானத்தையும் இடையர்கள் அடைந்த மகிழ்ச்சியையும் இந்த குடும்பம் கண்டு உணர ஆசீர்தாரும். உமது நலன்களாலும் உமது ஆசீராலும் இக்குடும்பத்தை நிறப்பியருளும். குழந்தை இயேசுவே எங்களுடைய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அன்பு, அமைதி, சமாதானம், மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க செய்தருளும். நீர்தாமே இத்திருக்குடும்பத்தை உமது பிரசன்னத்தால் வழிநடத்தி, உமது ஆசீரால் நிறப்பியருளும்.

 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

உம் ஆன்மாவோடும் இருப்பாராக

குரு: + தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - ஆமென்.

 

 

1 பேதுரு 2 பேதுரு 1, 2, 3 யோவான் வினாடி வினா

 1 பேதுரு

1. திருத்தூதன் பேதுரு தனது மடலை யாருக்கு எழுதுகிறார்?

2. விண்ணுலகில் நமக்கென்று என்ன வைக்கப்பட்டுள்ளது?

3. நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காக எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வருகிறோம்?

4. அழியக்கூடிய பொன் எதனால் புடமிடப்படுகிறது?

5. இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது  நம் நம்பிக்கை நமக்குப் எவற்றைத் தருவதாய் விளங்கும்?

6. நம் நம்பிக்கையின் குறிக்கோள் என்ன?

7. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறவர் யார்?

8. நம் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று நம்மை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்ன?

9. புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, எவ்வகைப் பாலை அருந்த ஆர்வமாயிருக்க பேதுரு அழைக்கிறார்?

10. கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்ததும், நம்க்கு அழியாத அலங்காரமாய் இருக்கவும் பேதுரு விரும்பும் பண்புகள் யாவை?

11. ஆபிரகாமைத் "தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தவர் யார்?

12. ஆண்கள் எப்பொழுது தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்?

13. வாழ்க்கையில் இன்பம் காணவும் நல்ல நாள்களைக் காணவும் விரும்புவோர் செய்ய வேண்டியது என்ன?

14. ஆண்டவரின் கண்கள் யாரை நோக்குகின்றன?

15. ஆண்டவரின் முகம் யாருக்கு எதிராக இருக்கின்றது?

16. தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், என்ன செய்து துன்புறுவதே மேல்?

17. யார் பாவத்தை விட்டு விடுகின்றனர்?

18. திரளான பாவங்களையும் போக்கக்கூடியது எது?

19. நம் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிவதால் நாம் எவ்வாறு இருக்க வேண்டும்?

20. பேதுரு தம் நம்பிக்கைக்குரிய சகோதரன் என கருதும் நபர் யார்?

2 பேதுரு

21. மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல. சரியா? தவறா?

22. இறைவாக்கு என்பது என்ன?

23. பாவம் செய்த வான தூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் செய்தது என்ன?

24. இறைப்பற்றில்லாத உலகின்மீது வருவிக்கப்பட்டது என்ன?

25. இறைப்பற்றில்லாதோரின் அழிவு எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக  எரித்துச் சாம்பலாக்கப்பட்ட இரு நகரங்கள் யாவை?

26. கட்டுப்பாடற்றுக் காமவெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்தியவர் யார்?

27. கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பிய நபர் பெயர் என்ன?

28. இயேசு கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள் மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால் ஏற்படும் விளைவு என்ன?

29. யார்; பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன?

30. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதற்கான காரணம் என்ன?

1, 2, 3 யோவான்

31. தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ……………………… பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்.

32. நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே என்று யோவான் குறிப்பிடும் செய்தி என்ன?

33. ………………………………………….. எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்?

34. இறை வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் எது உண்மையாகவே நிறைவடைகிறது?

35. …………………………………………., ……………………………………….., ……………………………….. தந்தையிடமிருந்து வருவன அல்ல.

36. ……………………………………அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்?

37. யார் எதிர்க் கிறிஸ்துகள்?

38. ………………………………….மீறுவதே பாவம்.

39. அலகையைச் சார்ந்தவர் யார்?

40. சாவிலேயே நிலைத்திருக்கின்றவர்கள் யார்?

41. தம் சகோதரர் சகோதரிகனை வெறுப்போர் அனைவரும் யார்?

42. கடவுள் நம் …………………………………………..விட மேலானவர்?

43. இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. சரியா? தவறா?

44. ………………………………….. என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்?

45. தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. சரியா? தவறா?

46. கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. – அதிகாரம் மற்றும் வசனம் குறிப்பிடுக.

47. யோவான் 2வது மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

48. யோவான் 3வது மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

49. தம்மைத் தலைவராக ஆக்கிக் கொள்ள விரும்பி யோவானின் அதிகாரத்தை ஏற்க மறுத்தவர் பெயர் என்ன?

50. யாரைக் குறித்து உண்மையும் யோவானும் சான்று பகர்கின்றனர்?



எபிரேயர் வினாடி வினா

 எபிரேயர்


1. முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் யார் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்?

2. வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றவர் யார்?

3. தம் முதற்பேறான மகனை உலகிற்கு அனுப்பியபோது, கடவுள் கூறியது என்ன?

4. “தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்" என்று கடவுள் யாரைக்குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்?

5. “நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கடவுள் வானதூதரைப் பார்த்துக் கூறினார்- சரியா? தவறா?

6. யார் வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது?

7. வரவிருக்கும் உலகினை கடவுள் வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை – சரியா? தவறா?

8. “மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?... என்ற வசனம் விவிலியத்தில் வேறொரு இடத்தில் இடம் பெற்றிருக்கிறது. அப்புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தை குறிப்பிடுக?

9. இயேசுவுக்கு எதனால் மாட்சியும் மாண்பும் முடியாகச் சூட்டப்பட்டது?

10. சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் எதன் வழியாகவே இயேசு அழித்து விட்டார்?

11. கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் யார் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்?

12. ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் யார்?

13. மோசேயின் ஊழியமாயிருந்தது எது?

14. எவற்றை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் கடவுளுடைய குடும்பத்தாராய் இருப்போம்?

15. எது வாழும் கடவுளை விட்டு விலகும்?

16. உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் ………………………………. என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.

17. கடவுளது குரலைக் கேட்டும் கிளர்ச்சி செய்தவர்கள் யார்?

18. “நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்று கடவுள் யாரைப்பற்றி ஆணையிட்டுக் கூறினார்?

19. “கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்" என்ற வசனம் விவிலியத்தில் வேறொரு இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. அப்புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தை குறிப்பிடுக?

20. யார் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்?

21. கிறிஸ்து தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொண்டார் – சரியா? தவறா?

22. இயேசு இறைமகனாயிருந்தும், எவ்வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்?

23. ஒரு முறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள் ……………………………………………. பெற்றவர்கள் ஆவர்?

24. சாலேம் நகரின் அரசர் யார்?

25. அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தவர் யார்?

26. மெல்கிசதேக்கு என்னும் பெயரின் முதற்பொருள் என்ன?

27. மெல்கிசதேக்கு ………………………………. எனச் சான்றுபெற்றவர்?

28. …………………………………………. வழியே இஸ்ரயேல் மக்கள் சட்டத்தைப் பெற்றவர்கள்.

29. நம் ஆண்டவர்  எக்குலத்தில் தோன்றினார்?

30. யார் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை?

31. திருச்சட்டப்படி யார் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள்?

32. ஒவ்வொரு தலைமைக் குருவும் ……………………………,     …………………………… செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.

33. “மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்" யார் யாரிடம் கூறியது?

34. ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்த  இடத்தின் பெயர் என்ன?

35. இரண்டாம் திரைக்குப் பின், ……………………………… என்னும் கூடாரம் இருந்தது?

36. இரண்டாம் கூடாரத்தில் யார் மட்டுமே செல்வார்? அவர் எத்தனை முறை செல்வார்?

37. இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு எதற்காக இரத்தத்தைப் படைப்பார்?

38. பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் - சரியா? தவறா?

39. மோசே கன்றுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; தெளிக்கும்போது கூறிய வார்த்தை என்ன?

40. ………………………………………………... இன்றி பாவமன்னிப்பு இல்லை.

41. எவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்காது?

42. இயேசுவின் உடலைக் கோவிலின் ……………………………… ஒப்பிடலாம்.

43. மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல், எத்தனை சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது?

44. எதனால் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார்?

45. நம்பிக்யையாலேயே சாவுக்குட்படாதபடி கடவளால் எடுத்துக் கொள்ளப்பட்டவர் யார்?

46. கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தவர் யார்?

47. மோசே பிறந்தபோது, குழந்தை அழகாய் இருக்கக்கண்டு, அவருடைய பெற்றோர் அரசனுடைய ஆணைக்கும் அஞ்சாது, அவரை எத்தனை மாதம் ஒளித்து வைத்திருந்தனர்?

48. ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றவர் யார்?

49. யார் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்கள்?

50. நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் யார்?


யாக்கோபு


51. யாக்கோபு தனது மடலை யாருக்கு எழுதுகிறார்?

52. ஐயப்பாடு கொள்பவர்கள் யாரைப் போன்றவர்கள்?

53. யார் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும் என்று யாக்கோபு குறிப்பிடுகிறார்?

54. சோதனை வரும்போது, …..…………………………………. என்று யாரும் சொல்லக்கூடாது?

55. கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர் – சரியா? தவறா?

56. பாவம் முழு வளர்ச்சியடைந்து எதனை விளைவிக்கிறது?

57. ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருபவைகள் யாவை?

58. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி எவற்றால் நம்மை ஈன்றெடுக்க கடவுள் விரும்பினார்?

59. வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர் எதற்கு ஒப்பாவார்?

60. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எது?

61. தீர்ப்பை வெல்லக்கூடியது எது?

62. உயிர் இல்லாத உடல் போல, ………………………………………. செத்ததே?

63. நெறிகெட்ட உலகின் உரு எது?

64. எவ்விடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்?

65. விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு என்ன?

66. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து  என்ன கனி விளைகிறது?

67. கடவுளைப் பகைப்பது என்பது யாது?

68. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது என்ன?

69. யாரேனும் துன்புற்றால் செய்ய வேண்டியது என்ன? மகிழ்ச்சியாயிருந்தால் செய்ய வேண்டியது என்ன?

70. மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டி மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போகச் செய்தவர் யார்?

யூதா


71. யூதாவின் சகோதரர் பெயர் என்ன?

72. தலைமைத் தூதரின் பெயர் என்ன?

73. "ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக" என்று கூறியவர் யார்?

74. பொய் காட்சியாளர்களோடு ஒப்பிடப்படும் விவிலிய கதாப்பாத்திரங்கள் மூவர் பெயர்களைக் குறிப்பிடுக?

75. ஆதாமுக்குப்பின் ஏழாந்தலைமுறையாக தோன்றியவர் யார்?


WWME Asian conference inauguration