1 பேதுரு 2 பேதுரு 1, 2, 3 யோவான் வினாடி வினா

 1 பேதுரு

1. திருத்தூதன் பேதுரு தனது மடலை யாருக்கு எழுதுகிறார்?

2. விண்ணுலகில் நமக்கென்று என்ன வைக்கப்பட்டுள்ளது?

3. நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காக எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வருகிறோம்?

4. அழியக்கூடிய பொன் எதனால் புடமிடப்படுகிறது?

5. இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது  நம் நம்பிக்கை நமக்குப் எவற்றைத் தருவதாய் விளங்கும்?

6. நம் நம்பிக்கையின் குறிக்கோள் என்ன?

7. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறவர் யார்?

8. நம் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று நம்மை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்ன?

9. புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, எவ்வகைப் பாலை அருந்த ஆர்வமாயிருக்க பேதுரு அழைக்கிறார்?

10. கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்ததும், நம்க்கு அழியாத அலங்காரமாய் இருக்கவும் பேதுரு விரும்பும் பண்புகள் யாவை?

11. ஆபிரகாமைத் "தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தவர் யார்?

12. ஆண்கள் எப்பொழுது தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்?

13. வாழ்க்கையில் இன்பம் காணவும் நல்ல நாள்களைக் காணவும் விரும்புவோர் செய்ய வேண்டியது என்ன?

14. ஆண்டவரின் கண்கள் யாரை நோக்குகின்றன?

15. ஆண்டவரின் முகம் யாருக்கு எதிராக இருக்கின்றது?

16. தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், என்ன செய்து துன்புறுவதே மேல்?

17. யார் பாவத்தை விட்டு விடுகின்றனர்?

18. திரளான பாவங்களையும் போக்கக்கூடியது எது?

19. நம் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிவதால் நாம் எவ்வாறு இருக்க வேண்டும்?

20. பேதுரு தம் நம்பிக்கைக்குரிய சகோதரன் என கருதும் நபர் யார்?

2 பேதுரு

21. மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல. சரியா? தவறா?

22. இறைவாக்கு என்பது என்ன?

23. பாவம் செய்த வான தூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் செய்தது என்ன?

24. இறைப்பற்றில்லாத உலகின்மீது வருவிக்கப்பட்டது என்ன?

25. இறைப்பற்றில்லாதோரின் அழிவு எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக  எரித்துச் சாம்பலாக்கப்பட்ட இரு நகரங்கள் யாவை?

26. கட்டுப்பாடற்றுக் காமவெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்தியவர் யார்?

27. கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பிய நபர் பெயர் என்ன?

28. இயேசு கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள் மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால் ஏற்படும் விளைவு என்ன?

29. யார்; பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன?

30. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதற்கான காரணம் என்ன?

1, 2, 3 யோவான்

31. தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ……………………… பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்.

32. நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே என்று யோவான் குறிப்பிடும் செய்தி என்ன?

33. ………………………………………….. எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்?

34. இறை வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் எது உண்மையாகவே நிறைவடைகிறது?

35. …………………………………………., ……………………………………….., ……………………………….. தந்தையிடமிருந்து வருவன அல்ல.

36. ……………………………………அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்?

37. யார் எதிர்க் கிறிஸ்துகள்?

38. ………………………………….மீறுவதே பாவம்.

39. அலகையைச் சார்ந்தவர் யார்?

40. சாவிலேயே நிலைத்திருக்கின்றவர்கள் யார்?

41. தம் சகோதரர் சகோதரிகனை வெறுப்போர் அனைவரும் யார்?

42. கடவுள் நம் …………………………………………..விட மேலானவர்?

43. இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. சரியா? தவறா?

44. ………………………………….. என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்?

45. தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. சரியா? தவறா?

46. கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. – அதிகாரம் மற்றும் வசனம் குறிப்பிடுக.

47. யோவான் 2வது மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

48. யோவான் 3வது மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

49. தம்மைத் தலைவராக ஆக்கிக் கொள்ள விரும்பி யோவானின் அதிகாரத்தை ஏற்க மறுத்தவர் பெயர் என்ன?

50. யாரைக் குறித்து உண்மையும் யோவானும் சான்று பகர்கின்றனர்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...