அர்ப்பண வாழ்வின் அருள்சாதனங்கள்

 

சமூக – பணி/அர்ப்பண வாழ்வின் அருள்சாதனங்கள்

இறைவாக்கு பின்ணனி

¦  2திமோ.1:6 உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.

¦  1திமோ.3:1சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார்.

¦  தீத்.1:5 5நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

1.       திருஅவையின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் அருள்சாதனங்கள் யாவை?

திருமுழுக்கும், உறுதிபூசுதலும் பெற்ற ஒவ்வொருவரும் (பொதுகுருத்துவத்தில் திருநிலை படுத்தப்பட்ட ஒவ்வொருவரும்) திருஅவையின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும்  ஒரு குறிப்பிட்ட சிறப்பு பணியினை ஆற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.  இந்த பணிக்காக இரு வகையான அருள்சாதனங்களை இறைவன் அளித்துள்ளார் – அவை: i)  குருத்துவம் / அர்ப்பணவாழ்வு / திருப்பட்ட வாழ்வு / திருத்தூது பணிகளின் -அருள்சாதனம் ii) திருமண அருள்சாதனம். இவை இரண்டுமே  ‘கடவுளின் பணிக்காக’ பிரத்தியேகமாக (exclusively) ஏற்படுத்தப்பட்ட அருள் சாதனங்கள். [1533-1535]

2.      இந்த இரு திருவருள் சாதனங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Ø  இவ்விரண்டுமே பிறரின் நன்மைக்காக எற்ற்படுத்தப்பட்டவை - உதாரனமாக

                    i.     குருத்துவம்: கிறிஸ்துவ மக்களுக்கு திருப்பலி நிறைவேற்ற,  அருள்சாதனங்களை வழங்க. எந்த ஒரு குருவும் தனது வாழ்வுக்காக குருப்பட்டம் பெறுவதில்லை

                  ii.     திருமணம்: திருஅவைக்கு தொடர்ந்து இறைவன் கொடுக்கும் மக்களைப்பெற்றெடுத்து அவர்களை நல்ல கிறிஸ்தவர்கள்ளக உருவாக்குதல்

(No one is ordained just for himself, and no one enters the married state merely for his/her own sake.)

Ø  இவ்விரு அருள்சாதனங்களுமே இறைமக்களுக்கு பணிபுரிவதற்கும், திருஅவையின் அங்கத்தினர்களை அல்லது கடவுளின் மக்களைக் கட்டி எழுப்புவதற்கும் ஏற்படுத்தப்பட்டவை.

Ø  இவ்விரு அருள்சாதனங்களுமே கடவுளின் அன்பை இந்த உலகிற்கு கொண்டுவரும் வாய்க்கால்கள் ஆகும்.  தொநூ. 12:2 உனக்கு ஆசி வழங்குவேன் …….. நீயே ஆசியாக விளங்குவாய்.

Ø  குருப்பட்டம் மீட்பின் ஒரு கருவி…குருப்பட்டம் வழங்கப்படுவது தனி ஒரு மனிதன் வாழ அல்ல மாறாக ஒட்டுமொத்த திருஅவையின் வாழ்விற்காக – புனித தாமஸ் அக்வினாஸ் -(1225-1274)

குருத்துவ அருள்சாதனம் The Sacrament of Holy Orders

3.      பொது குருத்துவத்துக்கும் பணிக்குருத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு யாது?

பொதுக்குருத்துவம்:

¦ ஒவ்வொரு கிறிஸ்தவளும், கிறிஸ்தவனும் கடவுளின் மகள், மகன். எனவே  ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் உணரச்செய்யவேண்டும். 

¦ அதாவது நமது கிறிஸ்தவ வாழ்வாலும் நாம் பிறரோடு கொள்ளும் நட்புறவாலும் அவர்கள் நம்மில் கிறிஸ்துவை காணவேண்டும். இதுவே திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருமே யேசுவின் குத்துவத்தில் பங்குபெறுகிறோம் என்பதன் பொருள். 

¦ எனவே நமது குருத்துவம் என்பது நாம் வாழும் சமுதாயத்தில் கிறிஸ்துவாக வாழ வேண்டும்; நமது சொல்லாலும் செயலாலும் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.  

பணிக்குருத்துவம்:     

¦ பொதுக்குருத்துவத்தில் பங்குபெறும் நம்மில் சிலரை  கிறிஸ்து அழைத்து                 i) ‘போதித்தல்’ (munus docendi),

ii)திருப்பலி போன்ற திருவழிபாடுகளை நிறைவேற்றல், விசுவாசிகளுக்கு திருவருள்சாதனக்களை வழங்குதல்(munus liturgicum)

iii)மேய்ப்பர்களாக ஆளும் ஆற்றல், அதிகாரம் (munus regendi)

ஆகிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்து விசுவாசிகளுக்கு உதவும்படி பணித்திருக்கிறார். [1546,1547, 1592]

 

4.      குருத்துவம் என்றால் என்ன?

v இது ஒரு திருவருள்சதனம்.

v கிறிஸ்து தனது திருத்தூதர்களிடம் ஒப்படைத்த மீட்புத் திட்டத்திற்கான (Economy of Salvation) பணிகள் உலகம் முடியும் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும், தொடர்ந்து நிறைவேற்றப்படவேண்டும்

v இதனையே திருத்தூதுப் பணி(apostolic ministry) என்றுஅழைக்கிறோம்

v இப்பணிக்குத் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தகுந்த தயாரிப்புகளுக்குப்பின் அப்பணிக்கான அங்கிகாரத்தையும் அதிகாரத்தையும் தூய ஆவியின் கொடையாக பெறும் அருள் அடையாளமே குருத்துவம் ஆகும்.

5.     அர்ப்பனவாழ்விற்கு திருநிலைப்படுத்தும்போது / குருத்துவ அருள்சாதனத்தைப் பெறும்போது என்ன நிகழ்கிறது?

v ஒருவர் குருப்பட்ட திருவருள் சாதனத்தைப் பெறும்போது  ‘புனித அதிகாரமான’ (sacred authority)  தூய ஆவியாரின் கொடையை ஆயர் வழியாக கிறிஸ்துவே அவருக்கு வழங்குகிறார்.

v ஒரு குருவானவர் உலகு சார்ந்த எதோ ஒரு உத்தியோகத்திற்காகவோ,  பொறுப்பிற்காகவோ, வேலைசெய்யவோ பணியில் அமர்த்தப்பட்டவர் அல்ல. 

v மாறாக தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, விசுவாச வாழ்வின் உடன்பிறப்புகளான சகோதர சகோதரிக்களுக்காக ஆன்மீகப் பணியாற்ற வரையறுக்கப்பட்ட (a definite power and a mission)  அதிகாரத்தையும், ஆற்றலையும் (உம். அப்பரசத்தை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும்மாற்றுதல், பாவங்களை மன்னித்தல்) பெறுகிறார். [1538]

6.      அர்ப்பன சபைகள் அல்லது குருத்துவம் பற்றிய திருஅவையின் புரிதல் என்ன? (அல்லது) குருத்துவம் இறைவனின் மீட்புத்திட்டத்தில் எத்தகைய பங்கு வகிக்கிறது?

¦ பழைய உடன்படிக்கையின் குருக்கள்  தங்களை /தாங்கள் விண்ணகம் சார்ந்தவறிற்கும் மண்ணகம் சார்ந்தவற்றிற்கும்; கடவுளுக்கும் மக்களுக்கும் இணைப்பாளர்களாக பணிசெய்வதை தங்கள் கடமையாகக் கருதினார்கள். [1திமோ.2: 5ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.]

¦ கடவுளுக்கும் மனிதருக்கும் இணைப்பாளர் கிறிஸ்து ஒருவரே என்பதால் பழைய உடன்படிக்கையின் குருத்துவத்தை

v முடிவுக்குக் கொண்டுவந்தார்,

v நிறைவுற செய்தார்

¦ கிறிஸ்துவுக்குப்பிறகு கத்தோலிக்க குருக்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் குருத்துவத்தின் பணியாளர்கள், என்பதே திருஅவையின் கோட்பாடு.  (Only Christ [is] truly priest. But the others are his ministers.)

¦ கத்தோலிக்க குருக்கள் திருவருள் சாதனங்களை நிறைவேற்றுவது தங்கள் சொந்த தகுதியாலோ, சக்தியாலோஅல்லது தங்கள் தூய்மையான நிலையாலோ அல்ல மாறாக கிறிஸ்துவின் பிரதினிதியாக மட்டுமே [“in persona Christi”]. 

¦ குருத்துவ திருநிலைப்படுத்துதல் வழியாக கிறிஸ்துவின் மீட்கும், குனப்படுத்தும் மன்னிக்கும், தூய்மைப்படுத்தும் ஆற்றல்கள் அவருக்கு அருளப்படுகின்றன. இதனாலேயே ஒரு குருவானவர் பணியாளர் என்ற நிலையிலிருந்து உயர்வாக உள்ளார்.  நல்ல ஒரு குருவானவர் வியக்கத்தக்க ஆற்றலை கிறிஸ்து தனக்கு அளித்துள்ளதை தாழ்சியான உள்ளத்தோடு உணர்ந்து கடமையாற்றுகிறார். [1539-1553, 1592]

7.      குருத்துவதின் படிநிலை (degrees of the sacrament) யாது?

v மூன்று படிநிலைகள் உள்ளன

v ஆயர் (episcopate) குருவானவர் (presbyterate) திருத்தொண்டர் (diaconate) [1554, 1593]

8.      ஆயர் திருநிலைப்படுத்துதலின் போது என்ன நிகழ்கிறது?

ஆயராக ஒரு குருவானவர்  திருநிலைப்படுத்தும்போது

i.        குருத்துவத்தின் முழுமையை பெறுகிறார்.

ii.        திருத்தூதர்களின் வாரிசுகளாக ஆக்கப்படுகிறார்,

iii.        ஆயர்கள் குழுமத்தின் இணைகிறார். 

iv.        மற்ற ஆயர்களுடனும் திருத்தந்தையுடனும் இனைந்து திருஅவையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாளர் ஆகிறார்.  குறிப்பாக, கற்பித்தல், புனிதப்படுத்துதல், ஆளுதல் ஆகிய பொறுப்புகளை நிரைவேற்ற திருஅவை அவரை நியமிக்கிறது. 

v.        இவ்வாறு ஆயர்பணி உண்மையான மேய்ப்புப் பணியின் அடையாளம் ஆகும்.    திருத்தூதுபணிஎன்பது உயர்ந்த, மதிப்புமிக்க, மகத்தான, கண்ணியமான, ஒப்பற்ற பணி.   இத்தகைய பணியினை ஆற்ற  கிறிஸ்து திருத்தூதர்கள் மேல் கைகளைவைத்து தூய ஆவியாரின் சிறப்பான வரங்களை பொழிந்தருளினார். 

vi.        கிறிஸ்து தமது திருத்தூதர்களை மேய்ப்பர்களாக நியமித்த நிகழ்வே ஆயராக திருநிலைப் படுத்துதலிலும் நிகழ்கிறது.

vii.        அதேபோல் ஆயர்களும் தனக்கு அடுத்தநிலையில் உள்ளவர்களுக்கு அவர்கள் தலைமீது கைகளை வைத்து தூய ஆவியாரின் கொடைகளை அளித்தார்கள்.  இந்த பாரம்பரியம் கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றுவரை ஆயர் திருநிலைப்படுத்துதல் (episcopal consecration )வழியாக காத்துவரப்படுகிறது. [1555-1559]

9.      திருதந்தைக்கும் ஆயர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

திருத்தந்தையும் அடிப்படையில் ஒரு ஆயரே.  ஆனல் ஆயர்களுக்குள் முதன்மையானவர், ஆயர்களின் குழுமத்தின் தலமைபொறுப்பை வகிப்பவர்.  குருத்துவ படிநிலயில் முதல் நிலையில் இருந்து திருச்சபையை ஆழ்பவர்.

10.  ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவனின் வாழ்வில் ஆயர் எத்துனை முக்கியமானவர்?

ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிபொறுப்பு யாது?

v ஆயர் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் பதிலாளராக (vicar = "earthly representative of Christ" ).செய்லபடுகிறார்.   அதாவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தலத்திருச்சபையின் விசுவாசிகளை பேணிக்காப்பதில்  கிறிஸ்துவின் பதிலாளராக மேய்ப்புப் பணியை தலைமையேற்று நடத்துகிறார்.

v அதேசமயம் ஆயர் குழுமத்தில் உறுப்பினராக இருந்து திருத்தந்தையோடும் மற்ற ஆயர்களோடும் இணைந்து திருச்சபை முழுவதுக்குமான (அனைத்து தளத்திருஅவக்குமான) மேய்ப்புப் பணியில் அக்கறையுடன் பங்கு கொள்கிறார்.

v அதாவது ஒரு ஆயர் திருஅவையின் விதிமுறைகளின்படி அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தலத் திருச்சபையின் விசுவாசிகளுக்கே  தலைமை பொறுப்பாளர் என்றபோதிலும்; திருத்தூதர்களின் முறையான வழித்தோன்றல்  என்பதாலும், கிறிஸ்து தம் திருத்தூதர்களித்த கட்டளையின்படியும் ஒரு ஆயர் மற்ற ஆயர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த திருஅவைக்கும் திருத்தூதுப் பணி ஆற்ற கடமைப்பட்டுள்ளனர். [1560]

11.  ஆயரால் நிறைவேற்றப்படும் திருப்பலி தனி சிறப்பு கொண்டுள்ளதாக ஏன் கருதப்படுகிறது?

நல்லாயனும், நம் தலைமைக்குருவுமான கிறிஸ்துவின் பதிலாளராக (Vicar) ஆயர் கருதப்படுவதால் ஆயர் நிறைவேற்றும் திருப்பலி கிறிஸ்துவே தலைமையேற்று நடத்தும் சிறப்பு கொண்டது.  [1561]

12.  தலத்திருஅவையில் ஆயருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உறவு எப்படி இருக்கவேண்டும்?

ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆயர் தனக்காக கிறிஸ்துவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து அவருக்கு  பணிந்து நடப்பதை தனது கடமை எனக்கருதவேண்டும். ஆயர் குருக்களோடும் திருத்தொண்டர்களோடும் இணைந்து தனது மேய்ப்புப் பணியினை செய்வதால் அவர் தல திருஅவையின் காணக்கூடிய அடித்தளமும் ஆதாரமாகவும் விளங்குகிறார்.  [1560-1561]

“கிறிஸ்து தன் தந்தைக்கு பணிந்து நடந்ததுபோல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்  ஆயரின் தலைமைத்துவத்தை ஏற்று அவருக்கு பணிந்து நடக்க வேண்டும்”.  அந்தியோக்கு இஞ்ஞாசியார்.

13.  குருத்துவ திருநிலைப்பாட்டின்போது என்ன நிகழ்கிறது?

குருத்துவ திருநிலைப்பாட்டின் போது ஆயர் குருவாக ஆவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்மீது இறைவனின் அருளையும், ஆற்றலையும் இறங்கச்செய்கிறார்.

இதன்மூலம் அவர் ஆன்மாமீது நித்தியத்திற்கும் அழிக்க/நீக்க இயாலாத “குருவாக திருநிலைபடுத்தப்பட்டவர் (குருவாக அபிக்ஷேகம் செய்யப்பட்டவர்)” என்ற முத்திரை பதிக்கப்படுகிறது.

i.     ஆயர் தலைமையேற்று நிறைவேறும் திருப்பலியில் குருப்பட்டம் பெற இருப்பவரின் பெயர் சொல்லி அழைக்கும் போது திருநிலைப்பாட்டு நிகழ்வு துவங்குகிறது.

ii.     ஆயரின் மறையுரைக்குப்பின் குருவாக அபிஷேகம் பெற இருப்பவர் ஆயருக்கும் அவருக்குப்பின் ஆயராக வருபவர்களுக்கும்  கீழ்படிவேன் என்ற உறுதிமொழி கொடுப்பார். 

iii.     ஆயர் குருப்பட்டம் பெற இருப்பவரின் தலைமேல் தன் கரங்களை வைத்து அபிஷேக செபத்தை சொல்லும்போதுதான் அவர் குருவாக திருநிலைப்படுத்தப்படுகிறார்.

அத்தருணத்திலிருந்து ஒரு முழுமையான குருவாக கிறிஸ்துவின் மீட்புப்பணியை செய்ய ஆரம்பிக்கிறார்.

ஆயரின் உடன் உழைப்பளி என்ற நிலையில்

i.          இறைவார்த்தையை எடுத்துரைப்பார்

ii.          திருவருள்சாதனங்களை விசுவாசிகளுக்கு நிறவேற்றிவைப்பார்

iii.          அனைத்திற்கும் மேலாக திருப்பலி நிறைவேற்றுவார். [1562-1568]

 

14.  குருத்துவ படிநிலயின் முதல் அல்லது ஆரம்பபடி எது?

v தியாகோன் (DEACON) அல்லது திருதொண்டர் என்ற நிலையே குருத்துவத்தின் முதல் படியாகும். 

v தியாகோன் என்பதன் பொருள் ‘தொண்டு செய்பவர்’.  இதன் வழி அவர் குருத்துவ நிலைக்கு அல்லாமல் தொண்டர் நிலைக்குமட்டுமே உயர்த்தப்படுகிறார்.

v தியாகோன் என்பதன் மூலம் diakonia. இதன் பொருள் தொண்டு / அருள்பணி செய்பவர்.

v அத்தோடு மறைக்கல்வி கற்பித்தல், நற்செய்தி அறிவித்தல், திருப்பலியில் மறையுரை ஆற்றுதல், திவ்யநற்கருணை வழங்குதல் திருமண சடங்குகளின் போது உதவுதல் அடக்க சடங்கை நடத்துதல்; , திருவழிபாடு நிகழ்வுகளில் உதவுதல் போன்றவற்றிலும் பங்குகொள்வார்கள்.திப.6:3-6.

v இந்த அருளடையாளத்தை ஆயரே தம் திருக்கரங்களால் நிறைவேற்றுவதால் அவர் ஆயருடன் சிறப்பான விதத்தில் இணைக்கப்பட்டு திருத்தொண்டருக்கு ஒதுக்கப்பட்ட பணியினை ["diakonia."]ஆற்றத் துவங்குகிறார்.

v இவ்வாறு கிறிஸ்துவின் மேய்ப்புப் பணியிலும் பிறர் அன்புப் பணியிலும் சிறப்பான விதத்தில் பங்கு பெறுகிறார். 

v குருத்துவ அருள் அடையாளத்தைப்போலவே திருத்தொண்டரின் மேலும் அழிக்க இயலாத  “திருத்தொண்டர்” என்ற முத்திரைபதிக்கப்படுகிறது. இந்த முத்திரயே அவர்களை கிறிஸ்துவின் சாயலை  ஒத்திருக்கசெய்கிறது.   [55]

15.  திருத்தொண்டராக திருநிலைப்படுத்தும்போது (diaconal ordination) என்ன நிகழ்கிறது?

திருத்தொண்டர் திருநிலைப்படுத்துதலின்போது அந்த அருளடையாளத்தைப் பெறுபவர் குருத்துவ திருவருள்சாதனத்துக்கு உட்பட்ட சிறப்பு தொண்டராக பணியமர்த்தப்படுகிறார்.  இதன் வழியாக மத்.20:28 கிறிஸ்துவின் “தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகதம் உயிரைக் கொடுப்பதற்கும்’  என்ற விருதுவாக்கை தனதாக ஏற்றுக்கொள்கிறார்.   உலகு சார்ந்த பலிபீடம் சார்ந்த அறச் செயல்கள்சார்ந்த பணிகளில் அனைவருக்கும் தொண்டு செய்பவராக மாறுகிறார்.  மறைசாட்சியான ஸ்தேவானை தங்களது முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். திப. 6:8

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.

16.  யாரெல்லாம் குருத்துவ அருள்சாதனத்தைப் பெற முடியும்?

Ø திருஅவையால் திருத்தொண்டராகவோ, குருவாகவோ,  ஆயராகவோ திருநிலைப்படுத்த அழைக்கப்படும்

Ø திருமுழுக்குப் பெற்ற எந்த ஒரு ஆண் கத்தோலிக்க கிறிஸ்தவரும், 

Ø முறையான தயாரிப்புக்குப் பின் இந்த திருவருள்சாதனத்தைப் பெற முடியும். [1577-1578]

17.  குருத்துவ திருநிலைப்படுத்துதல் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?

சூழல்:

Ø ஒரு ஆயரோ, குருவோ, திருத்தொண்டரோ தனக்காக இந்த அருள் அடையாளத்தை பெறுவதில்லை மாறாக அந்த தல விசுவாசிகளுக்கு பணியாற்றவே; எனவே விசுவாசிகள் அதிக அளவில் இந்த கொண்டாட்டத்தில் பங்குகொள்ள திருஅவை அழைக்கிறது.

Ø இதற்காக இந்த கொண்டாட்டதை

            i.     ஞாயிற்றுகிழமைகளில்

           ii.     அந்தந்த மறைமாவட்டத்தின் பேராலயத்தில்,

         iii.     பொருத்தமான நாளில்,

         iv.     தகுந்த பக்திசிரத்தையுடன்,

          v.     பெருவிழாவாக

நடத்துவது பொருள் உள்ளதாக இருக்கும் என்பது திருஅவையின் கருத்து.

Ø  மூன்றுதிருநிலைப்படுத்தும் நிகழ்வுகளும் (ஆயர், குருவானவர்,  திருத்தொண்டர்) ஏறக்குறைய ஒரே சடங்கு முறையில் அல்லது சடங்கு அமைவில் அமைந்துள்ளன.

Ø  திருப்பலியின் நடுவே இந்த சடங்கை நடத்துவதுதான் மிகப் பொருத்தமான சூழலாக இருக்கும்.[ 1572]

திருப்பொழிவு

Ø  திருப்பொழிவு அருள் அடையாளத்தின் திருநிலைப்படுத்தும் நிகழ்வின் முக்கியமான சடங்கு (essential rite of the sacrament):  திருநிலைப்படுத்தப்படுபவின் தலைமீது ஆயர் தன் கைகளை வைப்பதிலும் திருப்பொழிவு பெறுபவரின் பணிக்கு ஏற்ற கொடைகளை தூய ஆவியார்  பொழியுமாறு ஆயர் சொல்லும் அர்ச்சிப்பு செபமுமே திருநிலைப்படுத்தும் சடங்கின் அத்தியாவசிய பகுதியாகும். [1573]

கொண்டாட்டதின் (மாறுபட்ட திருவழிபாட்டு பாரம்பரியங்களால் சிறிய வேறுபாடுகள் காணப்பட்டலும்) பொதுவான செயல்முறை: இலத்தீன் வழிபாட்டு பாரம்பரியத்தின்படி

v துவக்க சடங்குகள்

v திருப்பட்டம் பெற இருப்பவரை தெரிவு செய்தலும் ஆயருக்கு அறிமுகப் படுத்துதலும்

v ஆயரின் அறிவுரைகள்

v தெரிவு செய்யப்பட்டவரை ஆயர் சோதித்தறிதல்

v புனிதர்களின் பிரார்த்தனை

v தெரிவுசெய்யப்பட்டவர் திருஅவையின் வழிகாட்டுதலின்படியும் கோட்பாடுகளின்படியும் இந்த புனித திருநிலைப்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டுள்ளார் என அவரை தயாரித்தவர்கள் சான்றளித்தல்

v தூய ஆவியார் அவர் பணியை புனிதப்படுதுகிறார் என்பதை உணர்த்த புனித் கேரிஸம் எண்ணெய்யால் அபிஷேகம் செய்தல் (ஆயர், குருத்துவ திருநிலைப்படுத்துதல் மட்டும்) இவை அல்லாது

v ஆயர் திருநிலைப்படுத்தும் சடங்கில் 

ü  திருவிவிலியம் வழங்குதல்,

ü  ஆயர் திருஅவையுடன் மணஒப்பந்தமாகிறார் என்பதைக்குறிக்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது

ü  ஆயர் தலத்திருஅவையின் தலைமைக் குரு என்பதை உணர்த்த  தொப்பி அணிவிக்கப்படுகிறது

ü  நல்லாயனாம் கிறிஸ்துவைப்போல் கவனமுடன் மேய்ப்புப்பணி செய்வார் என்பதை உணர்த்த ஆயனின் கைத்தடியைப் போன்ற செங்கோல் கொடுக்கப்படுகிறது.

v குருவாகத்திருநிலைபடுத்தப்படுபவருக்கு “விசுவாசிகள் அளிக்கும் காணிக்கைகளை ஆண்டவருக்கு காணிக்கையாக்குவதக் குறிக்க அப்பத் தட்டும் ரசப்பாத்திரமும் (paten and chalice) அளிக்கப்படுகிறது.

v திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படுபவ்ருக்கு இறைவார்த்தையை அறிவிக்கவேண்டும் என்பதை உணர்த்த திருவிவிலியம் அளிக்கப்படுகிறது.

18.  குருத்துவ திருநிலைப்பாட்டின் விளைவுகள் யாவை?

~       அழிக்க இயலா (நித்தியத்திற்குமான) பண்புகள்

Ø ஆயர்/குருவானவர் தூய ஆவியாரின் சிறப்பான கருணையால் கிறிஸ்துவுக்குள் இணைக்கப் படுகிறார்.  இவ்வாறாக திருஅவையில் கிறிஸ்துவின் கருவியாக செயல்படத் துவங்குகிறார்

Ø கிறிஸ்துவின் பிரதிநிதியாக, தல திருஅவையின் தலைவராக  பணியாற்ற அதிகாரம் பெறுகிறார்

Ø கிறிஸ்துவின் முப்பெரும் பண்புகளான குரு, இறைவாக்கினர், அரசர் அகியவற்றில் பங்குபெருகிறார்.

Ø திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் போன்று ஒரே ஒருமுறை வழங்கப்படும் அருள்சாதனம்

~       திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் போன்று ஒரே ஒருமுறை வழங்கப்படும் அருள்சாதனம்.  மீண்டும் மீண்டுமாகவோ அல்லது தற்காலிகமாகவோ  வழங்கக்கூடிய அருள்சாதனம் அல்ல.

~       தவிர்க்கமுடியாத அல்லது கடுமையான காரணங்களுக்காக ஒரு குருவானவரிடமிருந்து குருத்துவ அருள்சாதனத்தை ரத்து செய்யலாம்.  அப்போதிருந்து அவர் குருத்துவத்தின் அதிகாரத்தையும், கடமைகளையும் ஆற்றுவது தடை செய்யப்படுகிறது.

~       அதேசமயம், குருத்துவம் என்பது என்றுமே நீக்க இயலாத அழிக்க இயலாத நித்தியத்திற்குமாக அவருள் பதிக்கப்பட்ட முத்திரை என்பதால், அவர் பொதுநிலையினரின் அந்தஸ்த்திலும் கருதப்படுவது இல்லை.  புனித அகுஸ்தினாரின் கடுமையான வார்த்தைகளில் “குருத்துவ அருள் அடையாளங்கள் பரிக்கப்பட்ட ஒருவர் சாத்தானுக்கு ஒப்பானவர்”.

19.  அருள்பணியாளரின் (ஆயர், குரு, திருத்தொண்டர்) பணி எந்த அதிகாரத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது?

v திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்கள் தங்களின் திருப்பணியை தனது சொந்த அதிகாரத்தாலோ. தலைத்திருச்சபையின் தலைவர் என்ற அதிகாரத்தாலோ, அல்லது சமூகத்தின் கட்டளையாலோ செய்வதில்லை.

v மாறாக கிறிஸ்துவின் அதிகாரத்திலும், திருஅவையின் பெயரிலுமே செய்கின்றனர்.

v இறைமக்களுக்கு பணிபுரியவே இயேசு குருத்துவத்தை நிறுவி அதற்கான அதிகாரத்தையும்  அருள்பணியாளர்களுக்குக் கொடுத்துளார்.

20.  திருத்தூதுப் பணி எவ்வாறு உலகம் முடியும் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது? திருத்தூதுபணிஎன்பது உயர்ந்த, மதிப்புமிக்க, மகத்தான, கண்ணியமான, ஒப்பற்ற பணி.  இறைவனின் மீட்புத் திட்டத்தில் திருத்தூதுப்பணி பெரும் பங்காற்றுகிறது.   இத்தகைய பணியினை ஆற்ற  கிறிஸ்து திருத்தூதர்கள் மேல் கைகளைவைத்து தூய ஆவியாரின் சிறப்பான வரங்களை பொழிந்தருளினார்.  அதேபோல் ஆயர்களும் தனக்கு அடுத்தநிலையில் உள்ளவர்களுக்கு அவர்கள் தலைமீது கைகளை வைத்து தூய ஆவியாரின் கொடைகளை அளித்தார்கள்.  இந்த பாரம்பரியம் கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றுவரை ஆயர் திருநிலைப்படுத்துதல் (episcopal consecration )வழியாக காத்துவரப்படுகிறது. [1556]

21. குருத்துவ அருள்சாதனத்தை யார் வழங்கலாம்?

குருத்துவ திருவருள்சாதனம் ஒரு அப்போஸ்தலிக்க/திருத்தூது சார்ந்த திருவருள் சாதனம் என்பதால், திருத்தூதர்களின் வழிதோன்றல்களான ஆயர்கள் மட்டுமே இத்திருவருள் சாத்னத்தை வழங்கமுடியும். [1576]

22.  தமது மந்தையான திருஅவையை கிறிஸ்து எவ்வாறு தமது இரண்டாம் வருகையின்மட்டும் நடத்திச்செல்கிறார்?

¦ கிறிஸ்துவே தனது அப்போஸ்தலர்க்ளை தெரிவு செய்து தனந்து அதிகாரத்திலும் மீட்புப்பணியிலும் பங்கு கொள்ளச்செய்தார். 

¦ தாம் விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்ப்புரம் அமர்ந்தபின் தம் மந்தையை நிராதரவாக விட்டுவிடவில்லை.

¦ மாறாக தம்மை விசுவசித்து ஏற்றுக்கொண்டவர்களை (திருஅவையை)  தம் திருத்தூதர்களின், அவர்கள் வழி வருபவர்களின் (ஆயர்களின்) இடையறாத பதுகாபில் வைத்துள்ளார்.  இவ்வாறு கிறிஸ்து ஆயர்களையும், மேய்ப்பர்களையும் நமக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார்.  ஆயர்கள் வாழியாக கிறிஸ்து என்றும் நம்மை வழிநடத்துகிறார். [1575]

23.  குருத்துவ அருள்சாதனத்தைப் பெற நிபந்தனைகள் உள்ளனவா?

¦ குருத்துவ அருள்சாதனமு தனக்கு வழ்ங்கப்படவேண்டும் என எவரும் உரிமைகொண்டாட முடியாது.  கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே.

¦ இறைவனின் அழைப்பை தான் பெற்றுள்லதாக ஒருவர் உணர்ந்தால் திருஅவையில்  ‘குருக்களாக தெரிவு செய்யும் பொறுப்பிலும் அதிகாரத்திலும்’ உள்ளவர்களிடம் தனது ஆவலை பணிவுடன் எடுத்துக்கூறலாம்.

¦ மற்ற அருள்சாதனங்களைப்போலவே குருத்துவமும் ஒருவரின் தகுதியாலோ உரிமையாலோ பெறக்கூடிய ஒன்றல்ல; மாறாக இறைவனின் பேரிரக்கத்தாலும் கருணையாலும் மட்டுமே ஒருவருக்கு விலைமதிப்பற்ற கொடையாகாக்  கிடைக்கக் கூடிய ஒன்று. [1578]

24.  குருத்துவ வாழ்வுக்கு கற்பு (துறவு/மணத்துறவு /பிரமசரியம்) ஏன் அவசியம் எனக் கருதப்படுகிறது?  குருத்துவ வாழ்வுக்கும் கற்பு நிலைக்கும் உள்ள தொடர்பு என்ன?

v நிரந்தர திருத்தொண்டர் நிலைக்கு அர்பணித்துக்கொண்டவரகள் தவிர மற்ற குருத்துவ நிலையில் (ஆயர், குருக்கள்) இருப்பவர்களுக்கு கற்பு என்பது கண்டிப்பான ஒன்று என்பது கத்தோலிக்க (இலத்தீன்) திருஅவையின் உறுதியான நிலைப்பாடு.

v இறையாட்சி பணிக்கு  “முழுமையாக” என்னை அர்பணிக்கிறேன் என்பதின் உறுதியான நிலைப்பாடுதான் குருவானவரின் கற்புநிலை வாழ்வு. (அல்லது)

v இறையாட்சி பணிக்காக, திருஅவையின் பணிக்காக  தான் ஒரு புதுவாழ்வை, புனிதமான வாழ்வை மேற்கொண்டவன் என்று மனமகிழ்வோடு அறிக்கையிட்டு வாழும் வாழ்வே கற்புநிலை வழ்வு.

கீழை திருச்சபையில் இது (கற்பு நிலை வாழ்வு) தனிநபர் விருப்பமாகவும், தெரிவாகவும் கடப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருவர் திருநிலைப்படுத்தப்பட்டபின் திருமணம் செய்துகொள்ள அனுமதி இல்லை.[1579,1580]

1.      திருஅவையின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் அருள்சாதனங்கள் யாவை?

2.     இந்த இரு திருவருள் சாதனங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

3.     குருத்துவம் என்றால் என்ன?

4.      பொது குருத்துவத்துக்கும் பணிக்குருத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு யாது?

5.     அர்ப்பனவாழ்விற்கு திருநிலைப்படுத்தும்போது / குருத்துவ அருள்சாதனத்தைப் பெறும்போது என்ன நிகழ்கிறது?

6.     அர்ப்பன சபைகள் அல்லது குருத்துவம் பற்றிய திருஅவையின் புரிதல் என்ன? (அல்லது) குருத்துவம் இறைவனின் மீட்புத்திட்டத்தில் எத்தகைய பங்கு வகிக்கிறது?

7.     குருத்துவதின் படிநிலை (degrees of the sacrament) யாது?

8.     ஆயர் திருநிலைப்படுத்துதலின் போது என்ன நிகழ்கிறது?

9.     திருதந்தைக்கும் ஆயர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

10. ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவனின் வாழ்வில் ஆயர் எத்துனை முக்கியமானவர்?

ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிபொறுப்பு யாது?

11. ஆயரால் நிறைவேற்றப்படும் திருப்பலி தனி சிறப்பு கொண்டுள்ளதாக ஏன் கருதப்படுகிறது?

12. தலத்திருஅவையில் ஆயருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உறவு எப்படி இருக்கவேண்டும்?

13. குருத்துவ திருநிலைப்பாட்டின்போது என்ன நிகழ்கிறது?

14. குருத்துவ படிநிலயின் முதல் அல்லது ஆரம்பபடி எது?

15. திருத்தொண்டராக திருநிலைப்படுத்தும்போது (diaconal ordination) என்ன நிகழ்கிறது?

16. யாரெல்லாம் குருத்துவ அருள்சாதனத்தைப் பெற முடியும்?

17. குருத்துவ திருநிலைப்படுத்துதல் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?

18. குருத்துவ திருநிலைப்பாட்டின் விளைவுகள் யாவை?

19. அருள்பணியாளரின் (ஆயர், குரு, திருத்தொண்டர்) பணி எந்த அதிகாரத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது?

20. திருத்தூதுப் பணி எவ்வாறு உலகம் முடியும் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது?

21. குருத்துவ அருள்சாதனத்தை யார் வழங்கலாம்?

22. தமது மந்தையான திருஅவையை கிறிஸ்து எவ்வாறு தமது இரண்டாம் வருகையின்மட்டும் நடத்திச்செல்கிறார்?

23. குருத்துவ அருள்சாதனத்தைப் பெற நிபந்தனைகள் உள்ளனவா?

24. குருத்துவ வாழ்வுக்கு கற்பு (துறவு/மணத்துறவு /பிரமசரியம்) ஏன் அவசியம் எனக் கருதப்படுகிறது?  குருத்துவ வாழ்வுக்கும் கற்பு நிலைக்கும் உள்ள தொடர்பு என்ன?

ஒளியின் மக்களின்முன்மதி

 

ஒளியின் மக்களின்முன்மதி

இயேசு தான் வாழ்ந்த மூன்றாண்டு பகிரங்க வாழ்வில் பல ஆன்மீக, சமூக,  பொருளாதர விழுமியங்களை சராசரி மக்களும் புரிந்துகொள்ளும்வண்ணமாக பல எளிய உவமைகளைக்கொண்டு விளக்கியிருக்கிறார். அத்தகைய உவமைகளில் ஆன்மீகம் சார்ந்த ஒரு உவமைதான் நாம் லூக்16:1-9ல் வாசிக்கும் “முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்” என்ற உவமை.  இப்போது நாம் விவிலிய பகுதிக்கு வருவோம்.

விவிலிய பகுதி: 1இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்’ என்று துவங்கும் இந்த உவமை நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.  பலமுறை திருப்பலியில் வாசிக்கக் கேட்டிருக்கிறோம். இருப்பினும் நமது விண்ணக பயணத்திற்கு எவ்வளவு ஆழமான தொடர்புடைய அல்லது அவசியமான பாடம் என்பதை நாம் அவ்வளவாக உணர்ந்ததில்லை.   இந்த உவமையை நாம் புரிந்துகொண்டு நமது வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்ள, நற்செய்தியில் காணப்படும்  வீட்டுப் பொறுப்பாளர்’  நான்தான் என எண்ணிக்கொள்ளுங்கள். இந்த வீட்டுப் பொறுப்பாளர் வாழ்வில் இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது வீட்டுத் தலைவரிடம் பணிபுரியும் பகுதி, இரண்டாவது வீட்டுத் தலைவர் வீட்டில் பணி நீங்கியபின் வாழும் பகுதி.   அதேபோல் நம் ஒவ்வொறுவரின் வாழ்விலும் இரு நிலைகள் உள்ளன: முதலாவது இந்த உலகில் வாழும் வாழ்வு. இது வீட்டுத் தலைவரிடம் பணிபுரியும் பகுதியைக் குறிக்கிறது,  இரண்டாவது இறந்தபின் வான் வீட்டிற்குச் சென்று வாழும் மறு வாழ்வு.   இது வீட்டுத் தலைவர் பணியிலிருந்து நீங்கியபின்  வீட்டுப் பொறுப்பாளர் வாழும் பகுதியைக் குறிக்கிறது.

விவிலிய பகுதி: “3அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.

பணியிலிருந்து நீக்கப்பட்டபின்  அவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்  இரண்டு வகை வாழ்வை சிந்தித்துப் பார்க்கிறான்: ஒன்று கஷ்டப்படவேண்டிய வாழ்க்கை மற்றொன்று பிறர் அவனை ஏற்றுகொண்டு நிம்மதியாக வாழும் வாழ்க்கை. இதில் அவன் தெரிவு செய்தது நிம்மதியாக வாழும் வாழ்க்கை.  இந்த உலக வாழ்வுக்குப்பின் நம்முன்னும் இருப்பது இருவகை மறுவாழ்வு; ஒன்று விண்ணகத்தில் நித்தியத்திற்கும் இறைவனோடு பேரின்பத்தில் வாழ்வது மற்றொன்று நித்தியத்திற்கும் இறைவனைப் பிரிந்து வாழும் நரக வேதனை. இதில் இறைவனோடு நித்திய பேரின்பத்தைத் தெரிவு செய்யும் ஒருவர் தன் வாழ்வில்  முன்மதியோடு என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த உவமை.

விவிலிய பகுதி: 4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். 6அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். 7பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

வீட்டுப் பொறுப்பிலிருந்து அவனை நீக்கிவிடும் போது பிறர் தன்னை தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி செய்யவேண்டிய காரியத்தை முன்மதியோடு அவன் பணியில் இருந்தபோதே செய்துமுடித்துவிட்டான். அதேபோல் நான் இறந்தபின் இறைவன் என்னை தனது வான் வீட்டில் ஏற்றுக்கொள்ளும்படி நான் செய்யவேண்டிய காரியங்களை நானும் முன்மதியோடு  இந்த உலத்தில் வாழும்போதே செய்துமுடிக்க வேண்டும்.  நான் செய்யவேண்டிய அந்த காரியங்கள் என்ன என்ன என்பதும் எனக்குத்தெரியும். ஆம்

v என் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனதோடும் இறைவனை அன்பு செய்வேன் [மத். 22:37; மாற். 12:29-30;  லூக். 10:27]

v என்மீது நான் அன்பு செலுத்துவதுபோல் எனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வேன். 

v பசித்திருப்போருக்கு உணவளிப்பேன்; தாகமாக இருப்போருக்குப் பருகக் கொடுப்பேன்; அன்னியரை ஆதரவற்றவர்களை என் வீட்டில் ஏற்றுக்கொள்வேன்; ஆடையின்றி இருப்போரை உடுத்துவேன்; பராமரிக்க யாரும் இல்லாத நோயாளிகளை கவனித்துக்கொள்வேன்; சிறையில் வாடுவோரைத் தேடிச் சென்று ஆறுதல் கூறுவேன். “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு கூறியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் [மத்.25:31-46].  இத்தகைய காரியங்களை நற்செய்தி முழுவதும் காணலாம்;  உதாரணத்திற்கு “ஊதரிமைந்தன்”  “நல்ல சமாரியன்”. . . . .

விவிலிய பகுதி: 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.

நாமும் முன்மதியுள்ளவர்களாய் இவ்வுலகில் வாழும்போதே மேற்கூறியவற்றை செய்யும்போது இயேசுவும்(மத்25:34) ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி நம்மை பாராட்டுவார். 

விவிலிய பகுதி:  ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்

வீட்டுப் பொறுப்பாளர் இருளின் (இவ்வுலகின்) மக்கள்.  எனவே அவன் முன்மதி இருளின் முன்மதியாகவும் அவன் செய்த செயல்கள் இருளின் செயல்களாகவும் இருந்தன.  நாமோ ஒளியின் மக்கள், நமது முன்மதி ஒளியின் முன்மதியாகவும் நமது செயல்கள் ஒளியின் செயல்களாகவும் இருத்தல் வேண்டும்

. 9“ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

அதேபோல் நாமும் நம்வாழ்வில் நம்மிடம் இருப்பவற்றைக்கொண்டு பிறருக்கு நன்மைகளைச் செய்து  இறவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட செலவங்களை பிறரோடு பகிர்ந்துகொண்டு இறைவன் நம்மை நிலையான பேரின்ப வீட்டில் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி வாழ்வோம்.  இக்கருத்தை விவிலியத்தின் பல இடங்களில் காணமுடியும்.

v மத்.6:19-20 மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.  ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. 

v லூக்.12:33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. 

v 1யோவான் 3:17 உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? 

v 1திமோ6:18-19அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

நாம் முன்மதி உடையவர்களா? அந்த முன்மதி ஒளியின் முன்மதியா? நாம் முன்மதியுடன் செய்யும் செயல்கள் ஒளியின் செயல்களா? பதில் எதிர்மறையாக இருந்தால் காலம் தாழ்த்த வேண்டாம்.  இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம். 

 

பாவ மன்னிப்பை நம்புகிறேன்

 பாவ மன்னிப்பை நம்புகிறேன்

[மறைக் கல்வியின் பாகம் இரண்டு- ‘கிறிஸ்தவ மறைபொருள்களின் கொண்டாட்டம்’ என்ற பகுதியில் திருச்சபையின் அருட்சாதனங்கள் பற்றி விரிவாகக் கற்க உள்ளோம். இங்கு பாவ மன்னிப்பில் திருமுழுக்கு மற்றும் ஒப்புறவு அருட்சாதனங்களின் பங்கு பற்றிய திருச்சபையின் அடிப்படை விசுவாசத்தை மட்டும் சுருக்கமாக கற்க உள்ளோம்]

150   பாவங்கள் எவ்வாறு மன்னிக்கப் படுகின்றன?

கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் செல்லும் முன் தூய ஆவியை திருத்தூதர்கள் மேல் பொழிந்து உலகில் மனிதரின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார் (யோவா 20:22-230).  1. திருமுழுக்கு வழியாக நாம் பிறப்புநிலை பாவத்திலிருந்து கழுவப்பட்டு கிறிஸ்துவோடு இணைக்கப் படுகிறோம்.   2. திருமுழுக்கு பெற்றபின் நாம் உலகில் வாழும் நாட்களில் உலக தீய நாட்டங்களினால் கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கு ஒப்புறவு அருட்சாதனம்  (Sacrament of Penance) வழியாக மன்னிப்பைப் பெற்று  மீண்டும் இறைவனோடு இணைகப்படுகிறோம். [976-980]

151     திருச்சபை பாவத்தை மன்னிக்க முடியுமா?

முடியும்.  இயேசு தானே பாவங்களை மன்னித்தார். அதோடு பாவங்களை மன்னித்து மனிதரை பாவத்திலிருந்து விடுவிக்கும் பணியையும் அதிகாரத்தையும் திருச்சபைக்கு வழங்கியுள்ளார். [981-983, 986-987]

v பாவத்தை ஏற்று, அதற்காக மனம் வருந்தி, அதனை அறிக்கயிட்டு, மன்னிப்புப்பெற முன்வரும் எவருக்கும் தனது குருத்துவப் பணியின் அதிகாரத்தால் குருவானவர் அவரின் பாவங்களை மன்னிக்க முடியும். 

v குருவானவர்  பாவக்கறைகளை முழுமையாகா நீக்கியதின்விளைவாக ஒருவர் பாவத்தைக் கட்டிக்கொள்ளாத போது எத்தகைய பரிசுத்தத்தோடு இருந்தாரோஅதே பரிசுத்தமாக அவர் தூய்மையாக்கப்படுகிறார்.  இயேசு பாவங்களை மன்னிக்கும் இறைவல்லமையில் குருவானவருக்கு பங்களித்திருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.

v லூக்24:47‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும்’.  யோவா20:23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

v திருத்தூதர்களும் அவர்கள் வழி வருபவர்களும் (ஆஆயர்கள், குருக்கள்) இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தின் வழியாக இந்த ஒப்புறவு பணியைச் செய்துவருகிறார்கள்.

v பாவ வழியை விட்டு விலகி வரும் எவருக்கும் இரக்கத்தின் வாயிலை, மன்னிப்பின் வாயிலை திருச்சபை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும்.  காரணம் இயேசு அனைவரையும் மீட்கவே தன்னை பலியாகக் கொடுத்தார்.  எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும், ஒருவர் உண்மையிலேயே  வருந்தி, திருந்தி  மன்னிப்பு வேண்டினால் திருச்சபையால் மன்னிக்க இயலும்.

உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்

152     இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று ஏன் விசுவசிக்கிறோம்.

கிறிஸ்து மரித்து உயிர்த்தார், நித்தியத்திற்கும் வாழ்கிறார்,  தனது நித்திய வாழ்வில் நமக்கும் பங்கு அளிக்கிறார்.  கிறிஸ்துவின் இந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான்  “இறந்தோர் உயிர்த்தெழுவர்” விசுவசிக்கிறோம்.  [988-991]

யோவா11:25“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

1கொரி15:13-14, 19-20 13இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். 14கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். 19கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். 20ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது

152     உடல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

உலக பாவ நாட்டங்களுக்கு பலவீனமானதும் மற்றும் சாவுக்கு உட்படக் கூடியதுமான மனிதனை “உடல்’” என்று குறிப்பிடப்படுகிறது.  [990]

153   ‘உடலின் உயிர்ப்பு’  என்பதன் பொருள் என்ன?

நமது இறப்புக்குப்பின் நமது ஆன்மா வாழ்கிறது.  அதுபோல் இறப்பிற்குப்பின் சாவுக்குறிய நமது உடலும் ஒரு நாள் சாவுக்கு உட்பட முடியாத ‘உடலாக’ எழுப்பப்படும் என்பதே ‘உடலின் உயிர்ப்பு’  என்பதன் பொருள். [990]

154   உடலின் உயிர்ப்பை ஏன் விசுவசிக்கிறோம்?

மனுக்குலத்தை மீட்டெடுக்க இறைவன்  இயேசுக்கிறிஸ்துவின் வழியாக மனித உடலெடுத்து உலகிற்கு வந்தார்.  இறைவன் மனித உடலை தாழ்வுக்குறிய ஒன்றாகக் கருதவில்லை.  எனவே ஆன்மாவை மட்டும் அல்ல ஆன்மாவோடு உடலையும் மீட்க சித்தமானார். [988-991, 997-1001, 1015]

நாம் நம்பும் இரு மறை உண்மைகள்:

i.     கிறிஸ்து உண்மையாகவே சாவிலிருந்து உயிர்த்தார்; நித்தியத்திற்கும் வாழ்கிறார்.

ii.     கிறிஸ்துவே இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்:மத் 22:32.‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்”.  மாற் 12:27அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்”.  லூக் 20:38அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

iii.     கிறிஸ்துவை உயித்தெழச் செய்த அதே இறைவன் இறுதிநாளில் நம் அனைவரையும் உயிர்த்தெழச்செய்வார்.  நாமும் கிறிஸ்துவோடு நித்தியத்திற்கும் வாழ்வோம்

1 கொரி15:20 ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

1 கொரிந்தியர் 15:52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்றுரு பெறுவோம்.

உரோ8:21அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது

155 நாம் இறக்கும் போது என்ன நிகழ்கிறது?

நாம் இறக்கும் போது

i.    நமது ஆன்மா நமது உடலில் இருந்து பிரிக்கப்படுகிறது.

ii.    உடல் உருக்குலைய ஆரம்பிக்கிறது

iii.    அதே சமயம் ஆன்மா இறைவனிடம் செல்கிறது.

iv.    இறுதி நாளில் உயித்தெழப்போகும் தன் உடலுடன் இணையக் காத்திருக்கிறது.

[992-1004, 1016-1018]

v எவ்வாறு நாம் உயித்தெழுவோம் என்பது ஒரு மறைபொருள்.

v உயித்தெழுந்தபின் நமது உடலின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது நமக்கு எதுவுமே தெரியாது.

v பழைய எருசலேம் தேவாலயம் ஒரு இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆலயம், ஒரு கட்டிடம்.  அது அழிவுற்று புதிய எருசலேம் மலர்ந்தது.  அது எந்த ஒரு இடத்திலும் கட்டப்பட்டதல்ல மாறாக உலகமெங்கும் கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மாந்தர் அனைவரையும் குறிக்கிறது.

v தூய பவுல் ஒன்றை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்: 1கொரி15:43-44 மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. 1கொரி15:35-37“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர்பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

லூக்கா 18:30;  யோவான் 3:15;  யோவான் 3:16;  யோவான் 4:14;  யோவான் 4:36;  யோவான் 5:39;  யோவான் 6:27;  யோவான் 6:40;  யோவான் 6:68;  யோவான் 12:25;  யோவான் 17:3; திருத்தூதர் பணிகள் 13:48; உரோமையர் 5:21; உரோமையர் 6:22; உரோமையர் 6:23;  1 யோவான் 1:2;  1 யோவான் 2:25;  1 யோவான் 3:15;  1 யோவான் 5:13;  1 யோவான் 5:20.

156      நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும்போது நமது இறப்பின் போது கிறிஸ்து எவ்வாறு நமக்கு உதவுகிறார்?

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொருவரையும் அவர்களது மரண வேளையில் அவர்களை சந்தித்து முடிவில்லா பேரின்ப வீட்டிற்கு அவரே அவர்களை அழைத்துச் செல்வார். புனித தெரெசா (லிசியுக்ஸ்) கூறுகிறார்: இந்த உலகில் இருந்து என்னை எடுத்துச் செல்வது இறைவன் – சாவல்ல. [1005-1014, 1016, 1019]

v கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் நம் கண்முன் கொண்டுவந்தால் மரணம் என்பது ஒரு எளிதான நிகழ்வாகத்தான் நமக்குத் தோன்றும். 

v இறைவன் நம்மை அழைக்கும் போது ‘இதோ வருகிறேன்’ என்று சொல்வது நாம் இறைவன் மேல் கொண்டுள்ள அன்பின் மற்றும்  நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

v கிறிஸ்துவும் கெத்சமனித் தோட்டதில் அதையேதான் செய்தார்.

v மரண வேளையில் ஒருவர் அவ்வாறு கூறும் போது கிறிஸ்துவின் சிலுவைப்பலியில் அவர் தன்னையும் இணைத்துக்கொள்கிறார். எனவே பெரிய பாவம் அவரிடம் இல்லாத நிலையில் இயேசுவோடு அவரும் உயிர்த்து விண்ணகம் செல்கிறார்.

v 2திமோ2:11“நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;

v உரோ14:8 8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். “I Believe . . . in Life Everlasting”

நிலைவாழ்வை விசுவசிக்கிறேன்

நிலைவாழ்வு என்றால் என்ன?

இறப்பிற்க்குப் பிறகு உடனேதொடங்கும் வாழ்வு இது.  முடிவே இல்லாத தன்மை உடயையதால் இந்த வாழ்வை நிலைவாழ்வு என்று அழைக்கிறோம். ஒரு மனிதன் இறந்த அந்த நொடியில் அவனது ஆன்மா ஒரு குறிப்பிட்ட தீர்ப்பின் வழியாக நித்தியத்திற்குமான ஒரு சம்பாவனையை பரிசாக அல்லது தண்டனையாகப் பெறுகிறது.  தீர்ப்பை வழங்குவது  ‘வாழ்வோரின் மற்றும் இறந்தோரின் ஒரே நீதிபதியான’ கிறிஸ்துவே.

157      தீர்ப்பு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தீர்ப்பு இரண்டு வகைப்படும். 

       i.     தனித் தீர்ப்பு: ஒரு மனிதன் இறந்த அந்த நொடியில் அவன் ஆன்மாவுக்கு வழங்கப்படுவது தனித் தீர்ப்பு.  ஒருவரின் நம்பிக்கைக்கும், பிறர் அன்பு செயல்களுக்கும் ஏற்பத் தன் அழியா ஆன்மாவில் கடவுளிடமிருந்து கைமாறு பெற்றுக்கொள்வர்.  அந்த கைமாறு இருவகைப்படும்.

v உடனடியாகவோ அல்லது தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ (உத்தரிக்கும் நிலையின் முடிவுக்குப் பிறகோ) விண்ணகப் பேரின்பத்தை  அடைவர். 

v நரகத்தின் முடிவில்லா தண்டனையை அடைவர்.

      ii.          பொதுத் தீர்ப்பு: இது இறுதித் தீர்ப்பு எனவும் அழைக்கப் படுகிறது. உலகின் இறுதி நாளில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும்.  அப்போது கிறிஸ்து நடுவர் இருக்கையில் அமர்ந்து அளிக்கும் தீர்ப்பே பொதுத் தீர்ப்பு என அழைக்கப் படுகிறது. மத்25:31-46. [1021-1022]

v தனித் தீர்ப்பில் ஆன்மா ஏற்கனவே கைமாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ அல்லது தண்டனையிலோ உயிர்த்த உடல் நித்தியத்திற்கும் வாழும்.

 

158      விண்ணகம் என்றால் என்ன?

இறைவனின் கருணையிலும், நட்புறவிலும் மரிக்கும் ஒருவர் முழுவதும் தூய்மை ஆக்கப்பட்டபின் நித்தியத்திற்கும் கிறிஸ்துவோடு வாழ்கிறார். நித்தியத்திற்கும்  இறைவனை அவரது உண்மையான தோற்றத்தில் முகமுகமாய் தரிசுத்துக் கொண்டிருப்பார். விண்ணேற்பு அடைந்த கிறிஸ்துவோடும், வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் அன்னை மரியாளோடும் விண்ணக மாட்சியில் நித்தியத்திற்கும் வாழ்வார்.  இத்தகைய பாக்கியத்தால் அவர் கடவுளைப்போலவே தோன்றுவார்.  தூய மூவொரு கடவுளின் அன்பிலும், உறவிலும், மாட்ச்சியிலும், மற்றும் அன்னை மரியாள், வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் நித்தியத்திற்கும் முடிவில்லா பேரின்பத்தில் வாழும் ஒரு உன்னத நிலையையே விண்ணகம் என்று அழைக்கிறோம். [1023-1026, 1053]

கொரி13:12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

 

 

159      உத்தரிக்கும் நிலை அல்லது தூய்மைபெறும் நிலை என்றால் என்ன?

இறைவனின் நட்புறவிலும், கருணையிலும் இறந்தவர்களிடம், விண்ணக பேரின்பத்தில் நுழைய தடயையாய் இருக்கும், இன்னும் கழுவப்பட வேண்டிய, பாவ கறைகள் இருக்கக் கூடும்.  இத்தகையவர்களின் ஆன்மா விண்ணக பேரின்பத்தில் நுழைய அவசியமான புனிதத் தன்மையை அடைய தூய்மைப் படுத்தும் நிலைக்கு  உட்படுத்தப் படுகிறார்கள்.  இந்த நிலையைத்தான்  “உத்தரிக்கும் ஸ்தலம்” அல்லது  “தூய்மை பெறும் நிலை” என்று அழைக்கிறோம். [1030-1031]

v “தூய்மை பெறும் நிலை” நரகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலை. 

v ‘தூய ஆவியாருக்கு எதிராக கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கு’ என்றுமே மன்னிப்பு கிடையாது என்று கிறிஸ்துவே தெளிவுப்டுத்தியுள்ளார்.

v சில பாவங்களுக்கு இந்த உலகிலேயே ஒப்புறவு அருட்சாதனம் வழியாக மன்னிப்புப் பெறலாம்.  மன்னிப்புப் பெறாத இத்தகைய பாவங்களிலிருந்து அடுத்த நிலையில் (“தூய்மை பெறும் நிலை”) தூய்மை அடையலாம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

v இந்த கோட்பாட்டை கத்தோலிக்கத் திருச்சபையும்  “ஃப்ளோரன்ஸ் மற்றும் ட்ரெண்ட் அமர்வில்” வகுத்துள்ளது.

v மத்26:75; மாற்14:72; லூக்22:61,62 ‘ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்’.  அந்த நேரத்தில் பேதுருவுக்கு இருந்த உணர்வுகள், அனுபவித்த மன வேதனை, பட்ட அவமானம் இவற்றை “தூய்மை பெறும் நிலை”யில் இருக்கும் ஆன்மாவின் வேதனையை ஒப்பிடலாம்.

v நம்மில் பெருபாலானோர் இறக்கும் தருவாயில் பேதுருவின் நிலையிலேதான் இருப்போம். 

v நம் மரணவேளையில் இயேசு அன்போடும் கருணையோடும் நம்மை நோக்கும் போது நமது  அருவருக்கத்தக்க பாவங்களும், பிறர் அன்பில்லா செய்ல்களும் நம் கண்முன் வந்து பேதுரு அனுபவித்த அதே அவமானமும், வேதனை மிகுந்த துக்கமும் நம்மை சுட்டெரிப்பதை அனுபவிப்போம்.  அதற்காக மனம் நொந்து அழுவோம்.  இந்த வேதனைதான் நம்மை நமது பாவங்களிலிருந்து முற்றிலுமாகத் தூய்மைப்படுத்தி முடிவில்லா பேரின்பத்தைக் கொடுக்கும் விண்ணத்தில் நம்மை கொண்டுசேர்க்கும்.

 

160      தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு நாம் உதவ முடியுமா? எவ்வாறு?

நம்மால் உதவ முடியும்.  திருமுழுக்கால் புதுப்பிறப்படைந்த அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உறவில் ஒருவரோடு ஒருவர் இணைக்கப் பெற்றுள்ளோம். இந்த மறைஉண்மையின்படி தூய்மை பெறும் நிலையில் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கும் ஆன்மாக்களோடு இணைக்கப்பட்டுள்ளோம்.  எனவே தூய்மை பெறும் நிலையில்  வேதனையில் வாழும் அந்த ஆன்மாக்களுக்கு நாம் உதவ முடியும்.

ஒரு மனிதன் இறந்தபின் தனக்குத்தானே எதுவும் செய்துகொள்ள முடியாது.  அந்த வல்லமை இறப்போடு முடிவுக்கு வந்துவிட்டது.  ஆனால் இவ்வுலகில் வாழும் நாம் அவர்கள் தேவைகளுக்கு உதவ முடியும்.  

v திருச்சபை பாரம்பரியத்தில் இறந்தவர்களுக்காக செபிக்கும் பழக்கத்தின் நோக்கம் இதுவே.

v திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே இறந்தோரின் ஆன்மா தூய்மைப் படுத்தப்பட

Ø இற்ந்தோரை நினைவுகூறல்

Ø செபித்தல்

Ø அனைத்திலும் உயர்ந்ததான திருப்பலி ஒப்புக்கொடுத்தல்

Ø பிறருக்கு தான தர்மம் செய்தல்

Ø தவ முயற்சிகளைக் கடைப்பிடித்தல்

போன்ற செயல்களை திருச்சபை பரிந்துரை செய்கிறது. அத்தகைய ஆன்மாக்களுக்காக அவர்களின் மீட்ப்புக்காக இத்தகைய உதவிகளைச் தாராளமாகச் செய்வது நமது கடமையும் ஆகும். [1032, 1414]

 

161      நரகம் என்றால் என்ன?

இறைவனை அன்பு செய்யாத போது அல்லது அன்பு செய்ய மறுக்கும் போது நாம் அவரைவிட்டு பிரிந்து சென்று விடுகிறோம்.  நாம் இறைவனுக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் தனக்கு அடுத்திருப்பவருக்கு எதிராகாவும் பாவம் செய்யும். 

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...