பெரிய வெள்ளி –ஆரதணை

 

பெரிய வெள்ளி –ஆரதணை

மறைக் கல்வி மாணவர்கள்

பாடல்: 1. தூயவர், தூயவர்

தூயவர், தூயவர், தூயவர், மூவுலகிறைவனாம் ஆண்டவர்! 

வானமும் வையமும் யாவும் நும் மாட்சிமையால் நிறைந்துள்ளன!

உன்னதங்களிலே ஓசான்னா! (2)

ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவரே!

உன்னதங்களிலே ஓசான்னா! (2) 

தியானம்:

என் அன்புச்சகோதரமே நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. எனக்கு இல்லாமலிருந்த துயரம் ஒன்றுகூட இல்லை.  சரீர வேதனையோ; மனத்துயரமோ; இருதய வலியோ; உள்ளத்தின் சஞ்சலமோ எல்லாமே எனக்கிருந்தன.  இவைகள் அனைத்தையும் நான் அனுபவித்தேன்,  இந்த துன்ப  துயரங்கள் அனைத்தையும் நான் உணவாக உண்டேன்.  இவையெல்லாவற்றையும் கொண்டு என் தாகத்தை தீர்த்துக்கோண்டேன்.  எந்த அளவிற்கு அப்படிச் செய்தேனென்றால் அவற்றால் நான் உயிர் விட்டேன்.  இந்த துயரங்களின் கசப்பு இன்னும் இருக்கிறது

வாசகம்: யோவே2:12-17

12இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்.13 நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.14 ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?15 சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.16 மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.17 ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், "ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்" எனச் சொல்வார்களாக!

பாடல் – 2 :  அப்பா நான் தவறு செய்தேன்

அப்பா நான் தவறு செய்தேன் உன் அன்பை உதறிசென்றேன் நான் கெட்டலைந்து ஓடிவந்தேன், என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான்.          …… ………        அப்பா

பாடிவரும் பறவைகளும் காடுகளின் மிருகங்களும் உன் அன்பில் மகிழ்ந்திருக்க நான் உன்னைப் பிரிந்து சென்றேன்                                        ………………                    அப்பா

வாழ்வுதரும் வசனம் எல்லாம் நீர் என்று அறிந்த பின்னே  வேரு எங்கு நான் போவேன், எந்தன் புகலிடம் நீரே அப்பா                                 ……………                         அப்பா  

பதிலுரைப் பாடல்   திபா 130: 1-8

 பல்லவி: ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.

Ø ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;  ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். (பல்லவி)

Ø ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். (பல்லவி)

Ø  ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிடஆம்விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிடஎன் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. (பல்லவி)

Ø பேரன்பு ஆண்டவரிடமே உள்ளதுமிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! (பல்லவி)

தியானம்:

நான் கடவுளின் மகனாகவும், அமல உற்பவியான என் தாயின் மகனாகவும் இருந்தபடியால் மிகப் பிரகாசமான சரீரித்தைப் பெற்றிருந்தேன்.  அந்த பிரகாசம் இப்போது உங்களுக்காகக் கிழிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு துளைக்கப்பட்ட எண்ணிக்கையில்லா காயங்களிலிருந்து இரத்தம் வெளியேற்றப்பட்டு, ஒரு குக்ஷ்டரோகியினுடையதைப்போல் இருக்கிறது.  அத்தனை கொடூரமாய் அது அடிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டது.  ஆம். தாவீது கூறியதுபோல் / ஒரு புழுவாகவும்,/ மனுக்குலத்தின் நிந்தையாகவும் ஜனங்களின் பரிகாசமாகவும் காணப்படுகிறேன். என் பிதாவின்மீதும், என் பிதாவின் பிள்ளைகளாகிய உங்கள் மீதும் எனக்கிருந்த நேசமானது எத்தகையது தெரியுமா? என்னை அடித்தவர்களுக்கு என் சரீரத்தை கையளிக்க வைத்தது.  என்னை கன்னத்தில் அறைந்தவர்களுக்கும். காறி உமிழ்ந்தவர்களுக்கும் என் முகத்தைக் காட்ட வைத்தது. மேலும் என் தலையை முட்களால் ஊடுருவக் குத்தச் செய்தவர்களுக்கும், என் எலும்புகளை வெளியே தெரியச்செய்தவர்களுக்கும் என் ஆடைகளைக் களைந்து அதனால் என் தூய்மையை மிகக் குரூரமான முறையில் நோவுரச் செய்தவர்களுக்கும் ஒரு மரத்தோடு என்னை ஆணியால் அறைந்து இறைச்சி விற்பவனின் கொக்கியில் தொங்கவிடப்பட்ட ஆட்டைப்போல் என்னை சிலுவையில் தொங்கவிட்டவர்களுக்கும் அந்த அன்புதான் என் ஜீவன் பிரியுமட்டும் என்னை கையளிக்கவைத்தது.

பாடல் –3 இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2 
மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ                                                         இயேசுவின் 

அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு 
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு                                                                இயேசுவின் 
அலைகடலை விட பரந்த பேரன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு 
மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2
சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு -                                                                இயேசுவின் 

வாசகம் 2. எசாயா. 53:1-08

நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை:3 அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை.4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்: நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்: ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.7 அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை: அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

பதிலுரைப் பாடல். திபா 145: 8-18

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

v  ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்எளிதில் சினம் கொள்ளாதவர்பேரன்பு கொண்டவர்.ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். (பல்லவி)

v  ன் ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். (பல்லவி)

v  ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.  தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். (பல்லவி)

 

பாடல்:  இயேசுவின் நாமம் இனிதான நாமம்

 இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் --- இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் --- இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் --- இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் --- இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் --- இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் --- இயேசுவின்

தியானம்

நான் குற்றம் சுமத்தப்பட்டேன்;  தீர்ப்பிடப்பட்டேன்;  விற்கப்பட்டேன்;  காட்டிக் கொடுக்கப்பட்டேன்;  மறுதலிக்கப்பட்டேன்;  கைவிடப்பட்டேன்;  பிச்சைக்காரனைவிட வறியவனாக்கப்பட்டேன்;  கன்றிப்போன என் உடலின் நிருவாணத்தை மூடும் என் அங்கியைக்கூட இழந்தேன்;  கொலைசெய்யப்பட்டேன் நான் என்மேல் சுமத்திகொண்ட பாவங்களால் என்    தந்தையாலும் கைநெகிழப்பட்டேன்.  உங்களுடைய பாவங்களின் எல்லா அசுத்தங்களாலும் நான் என் தூய்மையை இழந்தேன்..  துயரத்தின் இருட்டான பாதாளம் வரைக்குக் நான் வீசியெறியப்பட்டேன்.  உங்கள் பாவத்தின் சாபத்தால் சாகிற என் கண்களுக்கு பரலோகத்தின் வெளிச்சம் மறுக்கப்பட்டது.   என் இறுதி கதறலுக்கு பதில் கூறக்கூடிய தெய்வீக அன்பு கூட  இல்லாமல் ஆக்கப்பட்டேன்.

பாடல்:  நான் பாவி இயேசுவே

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே

விழுந்துவிட்டேன் மனம் உடைந்து விட்டேன் என்னை தேற்றும் இயேசுவே . . . 2 -- நான் பாவி இயேசுவே

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன் மன அமைதி தாருமே . . . 2 -- நான் பாவி இயேசுவே

வாசகம் 3. எசாயா. 53:9-11

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்: என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்: செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

தியானம்

ஆனால் நீங்கள் மிக அதிகமாய்க் காயப்படுதியது என் உணர்வுகளையும் என் உள்ளதையும்தான்.  அவ்விரண்டையும் நீங்கள் சிரிப்புக்குரியதாயும்,  கேலிக்குரியதாகவும் ஆக்கினீர்கள்; யூதாஸின் வழியாக நான் காட்டிய நட்பில் அடித்தீர்கள்; என்னை மறுதலித்த இராயப்பர் வழியாக எனது பிரமாணிக்கத்தில் அடித்தீர்கள்.  என்னைப்பார்த்து ’அவனைக் கொல்லும், அவனைக் கொல்லும்’ என்று கூச்சலிட்டவர்கள் வழியாக நான் செய்த அனைத்து நன்மைகளிலும் அடித்தீர்கள்;  அவர்களை எத்தனையோ நோய்களிலிருந்து நான் குணமாக்கியிருந்தேன்.  அவர்கள் செய்த கொடூர செயல்களால் என் அன்பில் அடித்தீர்கள். இவன் கடவுளை தூக்ஷிப்பவன் என்று பழி சுமத்தியவர்கள் வழியாக எனக்கும் என் தந்தைக்கும் உள்ள புனிதமான உறவில் அடித்தீர்கள். ஆனால் நானோ என் தந்தையின் விருப்பத்தின்மேல் நான் கொண்ட ஆவலினால் மனிதவதாரமெடுத்து என்னை மனிதர் கையில் ஒப்படைத்தேன்.  என் வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட்டேன்.  மனிதக் குரூரத்திற்கு என்னை விட்டுக்கொடுத்தேன்.   ஒரு வார்த்தையும் நான் சொல்லவில்லை.  முறைப்பாடும் கூறவில்லை.  என்மேல் குற்றம் சாட்டியவர்களையும், தீர்ப்பிட்டவர்களையும், கொலை செய்தவர்களையும் எரித்து சாம்பலாக்க எனது ஒரு பார்வையே போதுமானதாக இருந்தது.  ஆனால்  நான் சுயமாகவே அப்பலியை நிறைவேற்ற வந்தேன். அதனால் ஒரு செம்மறிக் குட்டியைப்போல் மனிதர்கள் என்னைப் பிடிக்கவும், உரியவும் கொல்லவும் நான் கையளித்தேன்.  ஏனென்றால் நான் செம்மறியாக இருந்தேன்.  அப்படியே எக்காலமும் இருப்பேன்.  என் உடலை கொண்டு உங்களுக்கு வாழ்வு கொடுக்கும்படியாக மட்டுமே அப்படிச்செய்தேன். நான் பெத்லெஹேமில் பிறந்தபோதே சாகத்தொடங்கினேன். தொடர்ந்து நான் என் வறுமையிலும், நாடு நீங்கிய நிலையிலும், ஓடிப்போகுதலிலும், உழைப்பிலும். சோர்விலும், கட்டிக் கொடுக்கப்படுதலிலும், கொடுமைகளிலும், பொய்களிலும், தேவதூஷணங்களிலும் தொடர்ந்து நான் இறந்து வந்தேன்.  மனிதனை கடவுளுடன் ஒப்புரவாக்க வந்தேன்.  மனிதனோ எனக்குக் கொடுத்தவை இவைதான்.

பாடல் – 6 - நேசரே உன் திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தமே ஆனந்தமே                      (2)
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து  உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா                                 (2)
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை

 பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே             (2)
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை

 

பதிலுரைப் பாடல்: திபா 46: 1-8

பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

v கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால்நிலவுலகம் நிலைகுலைந்தாலும்மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (பல்லவி)

v ஆறு ஒன்று உண்டுஅதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்அது ஒருபோதும் நிலைகுலையாதுவைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. (பல்லவி)

v படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! (பல்லவி)

வாசகம்4. இணைச்சட்டம்.30:10-18

எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழ இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.11ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.12 நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.13 நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.14 ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.15 இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.16 அது இதுதான்: இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.17 ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,18 இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய்.

பாடல்: தொடும் என் கண்களையே

1.    தொடும் என் கண்களையே உம்மை நான் காணவேண்டுமே இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே

2.    தொடும் என் காதினையே உம் குரல் கேட்கவேண்டுமே இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே

3.    தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மை போல் என்னை மாற்றூமே

4.    தொடும் என் நாவினையே உம் புகழ் பாடவேண்டுமே இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

5.    தொடும் என் மனதினையே மனப் புண்கள் றவேண்டுமே இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

6.    தொடும் என் உடல்தனையே உடல் நோய்கள் தீரவேண்டுமே இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

7.    தொடும் என் இதயத்தையே உம் அன்பு ஊறவேண்டுமே இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே

வாசகம் 5.  எசாயா. 58:5-9

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்6  பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!8அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.9அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்: அவர் உனக்குப் பதிலளிப்பார்: நீ கூக்குரல் இடுவாய்: அவர் இதோ! நான் என மறுமொழி தருவார். 

பதிலுரைப் பாடல்: திபா 81: 6-13 ????

பல்லவி:பலியை அல்லஇரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.

v கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். (பல்லவி)

v ஏனெனில்பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாதுநான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமேகடவுளே! நொறுங்கியகுற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. (பல்லவி)

v சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!  அப்பொழுது எரிபலிமுழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். (பல்லவி)

வாசகம் : 10 பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2: 4-11

நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.5 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்:11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

பதிலுரைப் பாடல் திபா 95: 1-9

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

v வாருங்கள்ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். (பல்லவி)

v வாருங்கள்தாள்பணிந்து அவரைத் தொழுவோம்நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். (பல்லவி)

v இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!  அன்று மெரிபாவிலும்பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். (பல்லவி)

பாடல்:

இயேசுவே என்னுடன் நீ பேசு/ என் இதயம் கூறுவதைக் கேளு/ நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு 
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் நேரம்/ உன் திரு இதயம் பேரானந்தம்/ உன் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா உன் திரு நிழலில் நான் குடிகொள்ள‌
என்றும் என்னுடன் இருப்பாய்

வாசகம் : 11 உரோமையருக்கு எழுதிய திருமுகம். 6: 1-11

அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா?2 ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்?3 திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?4 இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.5 அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.6 நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. 10 அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.11 அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.12 ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள்.13 நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்: மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்: கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்.14 பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது: ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல: மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

பாடல்: ஏசுவின் பின்னால் நானும் செல்வேன்

 இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்  திரும்பிப் பார்க்க மாட்டேன்- 2

 சிலுவையே முன்னால் உலகமே பின்னால்  இயேசு சிந்திய குருதியினாலே  விடுதலை அடைந்தேனே

 

1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை   அடியேன் உள்ளத்திலே

  ஆண்டவர் இயேசு அடைக்கல மன்றோ  ஆதலில் குறையில்லை

  ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்  அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே

  விடுதலை அடைந்தேனே

2. தாயும் அவரே தந்தையும் அவரே   தரணியர் நமக்கெல்லாம்   சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும்

  தெய்வம் அவரன்றோ

  ஆயனே முன்னால் அனைத்துமே பின்னால்  அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே

  ஆறுதல் அடைந்தேனே

 

 

 

anonymous author

 

 

wwme 43 national conference chennai

Couples Accompaniment

Worldwide Marriage Encounter India

(50 years of service for the couples in India)

“Love one another as I have loved you”

 

Worldwide Marriage Encounter is a movement that helps couples to live out their commitment of their profession of love they have made on the wedding day.  WWME is a pastoral ministry that would help married couples to renew/to enrich/ to live the sacrament as a Christian family and to proclaim the value of Marriage and Holy Orders in the Church and in the world. This program is organized on weekends for couples. I had attended the weekends training and found it very useful to me. It may be useful for the other religious who are all involved in the pastoral ministry and building their respective religious communities.  There are enormous challenges to married life and commitment today. There are ups and downs, joys and sorrows, success and disappointments in marriage. Pope Francis said, “Marriage is not easy. It is never easy… but it is so beautiful… it is beautiful.” The most beautiful part is when a man and woman pledge their love for life. A movement like Worldwide Marriage Encounter helps to promote weekends to enhance growth and happiness in married relationships and to make good marriages great. Worldwide Marriage Encounter (WWME), is a program that has helped countless couples connect in healthy ways and deepen their intimacy, living out the commitment as couples.

Genesis: Worldwide Marriage Encounter is considered the first marriage enrichment program offered to married couples. The story of WWME began in 1952 when a young priest in Spain, Fr. Gabriel Calvo, began developing a series of conferences for married couples to encourage open and honest relationships within marriage and the living out of a sacramental relationship in the service of others.

In India Marriage Encounter has been active from 1973 onwards and established all over India as smaller units in different states.  Today, WWME weekends are offered in numerous languages and dialects.

Couples will explore their individual personality styles, improve listening and communication skills, understand God’s plan for their marriage, and learn how to keep their relationship a priority. All sharing between spouses is private, and the experience aims to help couples in good marriages communicate even better.

 

To Note: Marriage Encounter is designed to give married couples the opportunity to examine their lives together ... a time to share their feelings, hopes, disappointments, joys, and frustrations ... and to do so openly and honestly in a face-to-face, heart-to-heart encounter with the one person they have chosen to live with for the rest of their life. The emphasis of Marriage Encounter is on communication between husband and wife, who spend the weekend together away from the distractions and the tensions of everyday life, to concentrate on each other.

 

Divine Call is the Source of Inspiration for ME

 

My journey with WWME, is a great inspiration for me and to know about Marriage encounter (ME) from the sharing by the couples. I have seen many of couples leading a holy life, showing good examples for other couples, in the Church and more than that in their Marriage encounter ministry. As I have seen their struggle in leading a holy life because they have many challenges in the family living but they are together because they have understood each other. It is a God’s gift that each and every member of ME is called by God to bear witness as couples and to be a source of inspiration for other couples. I feel that God called me through Mr. Dorairaj and Ms. Mary Alphonsa to encounter the couples. It is a call within a call to do Marriage Encounter ministry as a Salesian of Don Bosco (SDB). I had the opportunity to attend weekend programmes and have undergone many changes being a religious priest living in communities.  At present Fr. Arulkumar SDB has been appointed as the National Ecclesial Team (NET) coordinating priest From January 2022 to December 2024. There are 5 units in Tamil Nadu as the active ME Unit Coordination Team (UCT) and planning to reach out to the other diocese.

 

Importance of Worldwide Marriage Encounter Weekends

Couples and priests are invited to take part in a marriage encounter weekend which is set in a loving atmosphere. It is designed to help married couples communicate more intimately with each other in order to deepen and enrich their relationship. We all live in a very busy world, constantly on the move from one activity to another and very often do not have time for our spouse or ourselves.

A marriage encounter weekend helps a couple to be together alone, to be away from all the distractions, to take time out, to focus on their relationship and to reconnect with the spouse. The effect of the weekend will leave a couple renewed in their commitment, restore communication and rekindle the romance in their married relationship. The weekend fans the flames of the amber of love and leaving a couple refreshingly all over in love again. In the marriage encounter we believe that a couple does not ‘need’ a weekend but rather ‘deserves’ a weekend because they are spending the time on the most important and precious relationship with their spouse. It reminds them of how special a couple’s love is for each other and how strong they can grow together.

Continual Renewal of Love

A priest or a religious is also a part of the Marriage Encounter weekend. Just as a couple has made a lifelong commitment, so too a priest has made a lifelong commitment to the Church, the people of God. The sacrament of matrimony and priesthood are parallel sacraments. It deepens his relationship with his people as he encounters himself in the weekend and is better able to understand the struggles of his people, the joys and sorrows of his people and helps in communication at a deeper level.

Pastoral Accompaniment

            Pastoral care must take priority in the church and couples have special attention in this. We must be patient and merciful to those who find themselves living in grave danger of breaking their relationships. They are to be treated as Jesus did to the poor, weak, suffering, and wounded. However, the pastoral priority, indicated by Amoris Laetitia for the present time, is to prevent as far as possible wounds, divisions, and marriage failures. “Today, more important than before, the pastoral care of failures is the pastoral effort to strengthen marriages and thus to prevent their breakdown” (AL 307; cf. ibid., 211).

We must confidently and patiently develop organic family pastoral care, including remote and immediate marriage preparation and, after the wedding, the formation of the couple and especially the young spouses  (cf. AL 200; 202; 207; 208; 227; 229; 230). For this, personal closeness and family encounters, small groups and communities are more beneficial than convoked assemblies and crowded meetings. With this aim, it is necessary to promote the protagonism of the families themselves and their missionary responsibility (“families which go forth”), while emphasizing, among other things, the cooperation of movements and ecclesial associations.

To conclude …

Marriage Encounter couples share the incredible gift of their “couple power” to the world around. Worldwide Marriage Encounter hopes to reach out to many more married couples, priests and religious bringing Marriage Encounter to many more countries and dioceses. When I did a Marriage Encounter weekend it changed my perspective of my priesthood, it helped me to grow in the conviction of being there for my people. In every weekend programme I experienced that I was rejuvenated and invariably at the end of the weekend programme I could sense the energy and vibrancy of the entire atmosphere that had changed because of the sharing of the participants. It is an amazing experience that refuels and renews the love that God has placed in our hearts for Jesus himself says, “Love one another as I have loved you,” and was expressed by giving his life for his bride the Church.

The ME couples, priests and religious are chosen by God for a great mission to take forward the marriage encounter programme to the couples. As we look ahead, we want to continue to attract couples of all ages, but particularly young couples, to the WWME experience to ensure its future. We want to inspire and engage our thousands of encountered couples and priests to help us fulfil our mission.

Worldwide Marriage Encounter invites all married couples to renew the romance, revitalize their marriage, communicate more openly, find deeper intimacy, focus on their spouse, and share joy. The positive effects are not limited to just the spouses; the entire family will benefit from the growing love as well.

Support Us:



Text Box: Bank Details
Bank Name: Corporaon Bank
Branch Name: Socorro, Goa
A/C Name: Worldwide Marriage Encounter India
A/C No: 520101045374593
IFSC: UBIN0902390
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


please  support us: the Worldwide Marriage encounter India 43rd National conference

please send the advertisements  & wishes to Sovenir issue @ Chennai

 

 

 

Fr.Arulkumar NET,

 Worldwide Marriage Encounter India. 8489891394

https://twitter.com/PascualChavez5/status/1678026693636653057?s=20

https://twitter.com/PascualChavez5/status/1678026693636653057?s=20 https://twitter.com/PascualChavez5/status/1678026693636653057?s=20

திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்பு வேலை செய்யும் இளையோருக்கு

 திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்பு

Call Center ல் வேலை செய்யும் இளையோருக்கு


1. இந்த இளையோர் அனுபவிக்கும் நன்மைகள்


கை நிறைய பணம்

சுதந்திரமாக வாழும் நிலை (யாரையும் சார்ந்திராத நிலை)

நாகரிகமான வாழ்வு (ஆடை, உணவு)

சமுதாயத்தில் மதிப்பு

அதிக நண்பர்கள் 


2. சந்திக்கும் இடர்கள்


1. மன அழுத்தம்

தூக்கமின்மையின் காரணமாக

வாடிக்கையாளர்களின் தேவையற்ற மற்றும் அநாகரிகமான பேச்சுக்களினால் 


2. வேறுபட்ட வேலை நேரம்

எல்லோரும் சந்தோஷமாக வாழும் நேரங்களில் - உறக்கம்.

மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் - உழைப்பு

எந்திரமயமான வாழ்க்கை.

உறவினர்களோடு சகஜமாக பழகமுடியாத நிலை.


3. பாதுகாப்பற்ற சூழல்

இளைஞர்களுக்கு அவ்வளவாக இல்லை. ஆனால் 

இளம்பெண்களுக்கு பாதுகாப்பற்ற சுழல்


4. உடல்நிலை பாதிப்புக்கள்

முதுகு வலி, கண் பார்வை மங்குதல், உறக்கமற்ற நிலை, பசியின்மை, ஜீரணமாக நிலை, உடல் எடை குறைவு 

பெண்களுக்கு – மாதவிடை விலக்கு தள்ளி போதல்


5. சமுதாயத்தில் தவறானபுரிதல் 

போதைக்கு அடிமை

நடத்தையின் மீது தவறான புரிதல் 


3. திருமணத்திற்கு பிறகு நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள்ஃசவால்கள்

சந்தேகம் - பல நண்பர்கள், தேவையற்ற சந்தேகம்



திருமணத்தை அடுத்த 

உடலுறவு - மனைவிஃகணவன் சந்தேகம் - சந்தோஷமின்மை

அதைத் தேடி வெளியே செல்லும் சூழல்



கருத்தடை, கருச்சிதைவு



குழந்தை வளர்ப்பதில் பிரச்சினை

4. இந்தப் பின்னனியில் திருமணம் என்றால் என்ன? 

அது பற்றிய உங்கள் புரிதல் என்ன?


திருமணம் என்றால் என்ன? என்னும் கேள்விக்கு ஒரு மாணவன் அளித்த பதில்


ஒரு பெண்ணும் ஒரு மாப்பிள்ளையும் பங்குத்தந்தையின் முன் முழந்தாளிட்டு தாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவிக்கின்றனர். பங்குத்தந்தை அவர்கள் இருவருடைய கைகளையும் இணைத்து, பிதாவே, இவர்களை மன்னியும்; ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். என்று சொல்லி அவர்கள் கைகளில் தீர்த்தம் தெளிக்கிறார். 


இது ஒரு வேடிக்கையான பதில். ஆனால் உண்மையான பதில். 


திருமண வாழ்வில் நுழையும் பலர் அவ்வாழ்வு என்னவென்று அறியாமலே அதில் நுழைகின்றனர். அதன் விளைவு திருமணம் டுழஎந ல் ஆரம்பித்து ளுவழஎந ல் முடிகின்றது.


5. திருமணம் ஓர் உடன்படிக்கை


திருமணம் என்றால் அது ஒரு உடன்படிக்கை. வழக்கறிஞர் சொல்வது போன்று திருமணம் ஒரு ஒப்பந்தம் கிடையாது. ஒப்பந்தம் பொருட்களைச் சார்ந்தது. ஆனால், உடன்படிக்கை ஆட்களைச் சார்ந்தது. 


5.1 பழைய ஏற்பாடு 


விவிலியம் காட்டும் இறைவன் உடன்படிக்கையின் இறைவன்; இறைவன் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். இந்த உடன்படிக்கையை கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவிற்கு ஒப்பிட்டுள்ளார் இறைவாக்கினர் ஓசே (2:19-20)


“முடிவில்லாக் காலத்திற்கும் உன்னை மணமுடிப்போம், நேர்மையிலும் நீதியிலும் நிலையான அன்பிலும் இரக்கத்திலும் உன்னை மணந்து கொள்வோம். பிரமாணிக்கத்துடன் நாம் உன்னை மணந்து கொள்வோம். நாமே ஆண்டவர் என்பதை நீயும் அறிந்துகொள்வாய்.”


உடன்படிக்கையின் அடிப்படைக் கூறுகளான அன்பும், பிரமாணிக்கமும் திருமணத்தில் இருப்பதால், திருமணம் ஓர் உடன்படிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


5.2 புதிய ஏற்பாடு


புனித சின்னப்பர் எபேசியருக்கு (5:25-32) எழுதிய திருமுகத்தில், கிறிஸ்துவை மணமகனாகவும், திருச்சபையை மணமகளாகவும் வர்ணித்து, கிறிஸ்தவ மணமக்களிடையே உள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையேயுள்ள புதிய, நித்திய உடன்படிக்கை அன்பின் மாதிரியில் ஊன்றி, அந்த உடன்படிக்கை அன்பைப் பிரதிபலிக்க வேண்டுமென்கிறார்.



5.3. இரண்டாம் வத்திக்கான் சங்கம்


“பல முகப்புக் கூறுள்ள இந்த அன்பு (திருமண அன்பு) இறை அன்பின் ஊற்றிலிருந்து பிறக்கிறது; நம் ஆண்டவர் கிறிஸ்து திருச்சபையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பின் மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கிறது; எனவே, இந்த அன்பின் மேல் கிறிஸ்து அறவற்ற முறையில் ஆசீர் பொழிந்துள்ளார். பிரமாணிக்கத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கையோடு கடவுள் முற்காலத்தில் தம் மக்களைச் சந்தித்தார். அதுபோலவே, இப்போது மனிதரின் மீட்பர், திருச்சபையின் மணமகன், திருமணம் என்கிற அருள் அடையாளத்தின் வழியாக கிறிஸ்தவ மண மக்களைச் சந்திக்க வருகிறார்” (இ.உ.தி. 48)


திருமண அன்பு பழைய ஏற்பாட்டில் இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையையும், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையையும் வெளிப்படுத்துகின்றது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம்.


5.4 திருச்சபைச் சட்டம்


“திருமண உடன்படிக்கையின் மூலம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களிடையே வாழ்நாள் முழுவதற்குமான ஓர் உறவுச் சமூகத்தை ஏற்படுத்தியுள்ளார் (தி.ச. 1055, பிரிவு 1)


திருமணம் வெறும் ஒப்பந்தம் மட்டுமில்லை. பரந்;து விரிந்த பரிணாமத்தை உள்ளடக்கிய உடன்படிக்கை என்று ஏன் சொல்கிறோமென்றால் மணமக்கள் கடமை – உரிமை என்ற குறுகிய வட்டத்துக்குள் தங்களை அடைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான்.


6. திருமணம் ஒரு அருளடையாளம்


திருமணம் ஒரு அருளடையாளம், புனிதத்தின்  வாய்க்கால். இவ்வருள் அடையாளத்தின் மூலம் மணமக்கள் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை அன்பிற்குச் சான்று பகர்கின்றனர். ஒருவர் ஒருவரை அன்பு செய்யவும், ஒருவர் ஒருவருக்கு பிரமாணிக்கமாய் இருக்கவும், குழந்தைகளைப் பெற்று வளர்க்கவும் தேவையான அருளைத் திருமணத்தின் மூலம் பெறுகின்றனர். 


திருமணமென்னும் அருளடையாளத்தால் மணமக்கள் ஒருவகையில் திருநிலைப் படுத்தப்படுகின்றனர் என்று 2ம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டுள்ளது; (இ.உ.தி. 48)


அருட்பணியாளர் - திருநிலைப்பட்டத்தால் திருநிலைப்பாடு

துறவறத்தார் - துறவற வார்த்தைப்பாட்டால் திருநிலைப்பாடு

மணமக்கள் - திருமணம் என்ற அருளடையாளத்தால் திருநிலைப்பாடு


மேலும், “உண்மையான திருமண அன்பு இறை அன்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது”” என்றும் சங்கம் கூறுகின்றது. இவ்வுண்மையை திருமணச் சடங்கு வெளிப்படுத்துகின்றது.


6.1 திருமணத்தின் திருப்பணியாளர்கள்


ஏனைய அருளடையாளங்களை அருட்பணியாளர் நிறைவேற்றுவதுபோல், திருமணமென்னும் அருளடையாளத்தை நிறைவேற்றுவதில்லை. மணமக்களின் சம்மதமே திருமணத்தில் அருளடையாளம். திருமண சமமதத்தை தெரிவிப்பது அருட்பணியாளர் அல்ல; மணமக்கள் தான். ஆகவே, திருமணம் என்னும் அருளடையாளத்தின் திருப்பணியாளர் – மணமக்களே.


அப்படியெனில், திருமணத்தில் அருட்பணியாளரின் பணி என்ன?


அருட்பணியாளர் மணமக்களின் சம்மதத்தை கேட்டு அதை ஏற்கின்ற 

அதிகாரம் பெற்ற சாட்சி.

மணமக்களை திருச்சபையின் பெயரால் ஆசீர்வதிப்பவர்.


7. திருமணத்தின் நோக்கம்


திருமண ஓலை எழுதவரும் மணக்களிடம், “நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வி கேட்பது வழக்கம். இக்கேள்விக்கு பலவிதமான பதில்கள் கிடைக்கும். அவற்றில் நால்வரின் பதில்கள் பின்வருமாறு:


என்ன சாமி, இப்படிக் கேட்டுப்புட்டீங்க? எனக்குன்னு ஒருத்தி வேணாமா?

எனக்கு உடம்புக்கு முடியலைன்னா, கை காலைப் பிடிச்சு அமுக்கிவிடுவதற்கு ஒருத்தி வேணாமா?

என்ன பாதர், மனுஷனுக்கு ஆசாபாசம் என்ற ஒன்று இருக்குதில்லே, அதை எப்படி தீத்துக்கிறது?

பரலோக அரசுக்கு ஆட்களை சேர்க்க நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் - அதாவது, மக்கட்பேற்றிற்காக. 


மேற்கூறிய புரிதல்கள் திருமணம் பற்றிய சரியான புரிதல்கள் அல்ல; அவைகள் திருமணத்தின் நோக்கங்களும் அல்ல. திருமணத்தின் நோக்கம் என்ன என்பதைப் புதிய திருச்சபைச் சட்டம் பின்வருமாறு வரையறுத்துள்ளது.


“திருமண உடன்படிக்கை தன் இயற்கை பண்பிலே, மணமக்களின் நலனுக்காகவும், மகப்பேறு, குழந்தை வளர்ப்பிற்காகவும் அமைந்துள்ளது” (தி.ச. 1055, பிரிவு 1)


பழையச் சட்டம் 1. மகப்பேறு

2. மணமக்களிடையே உள்ள பரஸ்பர உதவி, இச்சைகளின் தணிப்பு


புதியச் சட்டம் - மணமக்களின் நல்வாழ்வுஃஒன்றிணைப்பு மற்றும் மகப்பேறு - சரிநிகர்


7.1. திருமணத்தின் நோக்கம் - மணமக்களின் ஒன்றிப்பு


திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று மணமக்களின் ஒன்றிணைப்பு. மணமக்களிடையே இந்த ஒன்றிப்பை உருவாக்குவது அன்பு என்ற மகத்தான படைப்பாற்றல் மிக்க சக்தி. 


“மனிதன் தன் தந்தையையும், தாயையும் விட்டுத் தன் மனைவியோடு ஒன்றித்திருப்பான்” (தொ.நூ2:24)


பெற்றோர்களின் பாசத்தைவிட மணமக்களின் காதல் வலிமைமிக்கதாக மாறிவிடுகின்றது. காதலின் வலிமையை விவிலியம் அழுத்தமாக கூறுகின்றது


“காதல் சாவைப்போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெருப்புச் சுடர்கள் போலும், அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும். பெருங்கடலும் அன்பைத் தணிக்க முடியாது, வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது” (இ.பா 8:67)


திருமண அன்பு இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மாபெரும் கொடை.

இறைவன் தான் படைத்த அனைத்தையும் உற்றுநோக்கிய போது, அவரின் படைப்புகள் நன்றாக இருந்தன. மிகவும் நன்றாக இருந்தன. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் அவரின் பார்வைக்க நன்றாகத் தோன்றவில்லை. அது ஆதாமின் தனிமை.


“மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலில் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம்”


7.2. திருமணத்தின் நோக்கம் - மகப்பேறு


வையத்தில் வாழ்வாங்கு வாழ ஒருவர் பெற வேண்டிய பேறுகள் பதினாறு என்பர். “பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவது தமிழ் மரபு. இப்பதினாறு பேறுகளும் குழந்தைகள் என்று தவறாக இதற்கு பொருள் கூறுகின்றனர். 16 பேறுகள் பின்வருமாறு:


1. புகழ,; 2. கல்வி, 3. வலிமை, 4. வெற்றி, 5. நன்மக்கள், 6. பொன், 7. நெல், 8. நுகர்ச்சி, 9. நல்லூழ், 10. அழகு, 11. அறிவு, 12. இளமை, 13. பொறுமை, 14. துணிவு           15. நோயின்மை, 16. வாழ்நாள்.


மனிதன் பெற வேண்டிய இப்பதினாறு பேறுகளில் மிகச்சிறந்தது – மக்கட்பேறு


“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)


இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற மனிதனுக்கு இறைவன் தரும் பேறுகள் இரண்டு: 1. நல்ல மனைவி, 2. நல்ல பிள்ளைகள் என்று விவிலியம் கூறுகின்றது.


“கனிதரும் கொடி முந்திரி போல் உன் மனைவி என் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள் ஒலிவச் செடிகள் போல் உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்கு கிடைக்கும் ஆசி இதுவே” (திபா: 127:3-4)


திருமணத்தின் மாபெரும் கொடை குழந்தைகள்; பலுகிப் பெருகி நில உலகத்தை நிரப்புங்கள் (தொநூ 1:28) என்ற இறைவாக்கு, முதல் பெற்றோர்களுக்கு இறைவன் வழங்கிய ஆசியும் ஆணையும் ஆகும். இந்த ஆணையை நிறைவேற்றும் பொறுப்பு வாய்ந்த பெற்றோர்கள் கடவுளின் படைக்கும் திறனில் பங்கேற்பதுடன், கடவுளை மாட்சிப்படுத்துகின்றனர் என்று 2ம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டுள்ளது (இ.உ.தி. 50)


7.3 மகப்பேறுப் பற்றி மானி;ட உயிர் (ர்ரஅயயெந ஏவையந) 

சுற்று மடலின் போதனை


திருமணப் பாலுறவு இரு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று கணவன் மனைவி அன்பினால் ஒருங்கிணைவது, மற்றொன்று மகப்பேறு. இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றை மனிதன் குறுக்கிட்டு பிரித்தல் முறையற்றது. 


நாம் இருவர், நமக்கு இருவர் என்று தொடங்கி, 

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறி, 

நாம் இருவர், நமக்கு சைபர் என்று முடியும் நிலையில் உள்ளது 

இன்றைய குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரச்சாரம்.


இன்றைய உலகில் ‘உயிர்ப்பு எதிர்ப்பு மன நிலை’ உருவாகிக்கொண்டிருக்கிறது. மானிட உயிருக்கு உலகம் தரும் பதில் ‘வேண்டாம்’. ஆனால், மானிட உயிரை அதன் துவக்க நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் திருச்சபை பாதுகாக்கின்றது. எனவே, எல்லாவிதக் கருத்தடை முயற்சிகளையும், கருச்சிதைவையும் எதிர்க்கின்றது. 


7.4 கருத்தடையும், கருச்சிதைவும்


கருத்தடை என்பது கரு உருவாகாமல் தடை செய்வது; செயற்கைமுறைக் கருத்தடை பாவம் ஆகும். 


கருச்சிதைவு என்பது தாயின் வயிற்றில் உருவான கருவை மனிதனின் தலையீட்டால் அழிப்பது; கருச்சிதைவு பாவம் மட்டுமல்ல, அது ஒரு பாதகம். கருச்சிதைவு செய்து கொள்கிறவர்களுக்கும் அதற்கு உடந்தையாக இருக்கின்றவர்களுக்கும் திருச்சபையிலிருந்து நீக்கம் (நுஒ-உழஅஅரniஉயவழைn)  என்ற தண்டனையைத் திருச்சபைச் சட்டம் விதிக்கின்றது. (திச1398)  


“ஒரு தாய் தன் குழந்தையைத் தன் வயிற்றில் கொல்ல முடியும் என்றால், மனிதனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” – அன்னை தெரசா.

அதே வேளையில், விவேகம் இல்லாமல், பொறுப்புணர்வு இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகளைப் பெற்றுத்தள்ள வேண்டுமென்று திருச்சபை ஒருக்காலும் கூறியதில்லை. மானிட உயிர் எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.


மணமக்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும்; தங்களின் நலத்தைக் கருதுவதுடன் தங்களுக்கு ஏற்கனவே பிறந்துள்ள, மற்றும் வருங்காலங்களில் பிறக்கப்போவதாக எதிர்பார்க்கின்ற குழந்தைகள் நலத்தையும் கருத வேண்டும். இந்த முடிவைக் கடவுள் முன்னிலையில் மணமக்களே எடுக்க வேண்டும் (இ.உ.தி.50)


7.5 குடும்பக்கட்டுப்பாட்டில் திருச்சபையின் நிலை


தக்க காரணங்களுக்காக மணமக்கள் இனப்பெருக்க வளமற்ற கால இடைவெளியில் (ழெn-கநசவடைந pநசழைன) திருமணப் பாலுறவு கொள்வது முறையானதே என்று திருத்தந்தை 6ம் பவுல் ‘மானிட உயிர்’ என்ற தனது சுற்றுமடலில் தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே கிறிஸ்தவத் தம்பதிகள்  செயற்கை கருத்தடை முறைகளைக் கையாளாமல் இயற்கைக் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே திருச்சபையின் விருப்பம்.

சில திருமணங்கள் மலட்டுத் திருமணங்களாக அமைந்து விடுகின்றன. மணமக்கள் எவ்வளவோ விரும்பியும் அவர்களுக்கு மகப்பேறு கிட்டுவதில்லை. இத்தகைய திருமணங்கள் உண்மையான திருமணங்கள் என்றும், திருமணம் பிள்ளைப் பேற்றுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும், மகப்பேறு இல்லாத திருமணமும் உண்மையான திருமணமே என்றும் 2ம் வத்திக்கான் சங்கம் கூறியுள்ளது (இ.உ.தி. 50).


8. திருமணத்தின் இரு பண்புகள்


8.1. ஒருமைப் பண்பு


திருமணத்தின் முதல் மூலக்கூறு ஒருமைப் பண்பு. அதாவது, கிறிஸ்தவத் திருமணம் ஒரு தாரத் திருமணமாகும்; எனவே, அது பல தாரத் திருமணத்தை தடை செய்கிறது.


மணமக்களின் திருமண சம்மதத்தின் விளக்கம்

“நான் உன்னை என் வாழ்நாள் முழுவதும் அன்பு செய்கிறேன்; உன்னை மட்டும் அன்பு செய்கிறேன்.”


மணமக்களின் விசுவாசப் பிரமாணம்

“ஒரே மனைவியை விசுவசிக்கிறேன்; ஒரே கணவனை விசுவசிக்கிறேன்.”


ஒருவன் உள்ளத்தில் குடி இருக்க வேண்டியவள் ஒருத்தி மட்டும். கற்பு நெறி என்பது பெண்களை மட்டுமன்று, ஆண்களையும் கட்டுப்படுத்தும் நெறியாகும். 


“கற்புநிலை என்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”


கற்புநிலை என்பது ஆண் பெண் ஆகிய இரு பாலருக்குமே பொதுவானது என்று அடிகோடிட்டுள்ளார் பாரதி.


“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” (குறள் 148)


பிறருடைய மனைவியை நோக்காத பண்பே உண்மையான ஆண்மை; அதுவே, ஆண்களுக்கு அழககு, அறன், அருமையான ஒழுக்கம். இது வான்புகழ் வள்ளுவர் கண்ட வாழ்வு முறை.


அதே நேரத்தில், கற்பு என்பது பெண்களின் தலைசிறந்த அணிகலனாகும். 

“கற்புநிலையே சிங்காரம் - அது

தப்பினோர் அழகு சவ அலங்காரம”; (வேதநாயகம் பிள்ளை)


“ஒரே கிறிஸ்து, ஒரே திருச்சபை. அவ்வாறே ஒரே கணவன் ஒரே மனைவி. திருமண அன்பு எவ்வித விபச்சாரத்தையும், மண முறிவையும் புறம்பாக்குகிறது; ஆண்டவரால் உறுதிப்படுத்தப்பட்ட திருமணத்தின் ஒருமைப்பண்பு தெளிவாகத் துலங்குகிறது.” (இ.உ.தி.49)



8.2 முறிவுப்படாத் தன்மை


திருமணத்தின் இன்றியமையாத மற்றொரு மூலக்கூறு முறிவுப்படாத் தன்மை. அதாவது, கிறிஸ்தவத் திருமணங்கள் விவகாரத்துக்கு உட்பட்டவை அல்ல. மண முறிவு என்பது கிறிஸ்தவ அகராதியில் இல்லை. “கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.” (மத்19:6)


“ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதியில் முத்திரையிடப்பட்டதும், எலலாவற்றிலும் மேலாகக் கிறிஸ்துவின்  அருளடையாளத்தால் புனிதப்படுத்தப்பட்டதுமான திருமண அன்பு இன்பத்திலும், துன்பத்திலும் உடலாலும் உள்ளத்தாலும் தவறக்கூடாத முறையில்  பிரமாணிக்கம் கொண்டது. ஆகையால் அது எல்லாவித விபச்சாரத்தையும், மணமுறிவையும் புறம்பாக்குகின்றது” (இ.உ.தி.49) 


9. செய்யவேண்டியவைகள்

1.      Talk it Over          

-           if you doubt clarify the doubt.

-                      if not will end up in mess.

2.      Don’t indulge in extra marital sex because          

-           immoral

-                      brings bad reputation

-                      prone to acquire AIDS – Transmit to your wife, children

3.      Inner happiness is affected because of

-           guilty conscience

-                      and will enter into drinking and addiction to drugs

4.      Use Natural Family Planning; not Artificial condoms

5.      Never Abortion.   


Infatuation and Love

 

Infatuation is the initial, instant attraction and intense desire for a person of the opposite sex.

Love is a friendship that has caught fire. It takes root, develops and grows one day at a time. The process is slow.

****************

Infatuation lacks confidence. When he/she is away you wonder if he/she is cheating you. Sometimes you check perhaps even discreetly.

Love means trust. You are calm, secure and unthreatened. Your beloved feels the same also and this makes both even more trustworthy.

****************

Infatuation is marked by a feeling of insecurity. You are excited and eager, but not genuinely happy. There are nagging doubts, unanswered questions or some unclear actions about your beloved that you would not like to examine too closely. It might spoil the dream.

Love is quiet understanding and mature acceptance of imperfection. It is real. It gives you strength and grows beyond you to bolster your beloved. You are warmed by his/her presence even when he/she is away. Miles of distance do not separate you. You want him/her nearer, but near or far, you know he/she is yours and you can wait.

****************

Infatuation has an element of sexual excitement. If you are honest, you can admit it is difficult to be in one another's company, for the underlying fear that it will end in intimacy.

Love is the maturation of friendship. You are confident that you must be friends before you can be lovers.

****************

Infatuation is usually temporary and eventually fades. It, however, might lead you to do things you will regret later, but love never will.

Love is an upper. It makes you look up. Love usually lasts longer and goes deeper than strong sexual Feelings. It makes you think up and makes you a better person.

****************

Infatuation makes you feel anxious, nervous and jealous. You feel convinced that you can't live without the other person. You are unable to see the person for who they really are because he/she is perfect in your eyes.

Love makes you feel excited. You are willing to respect the other person's opinions and accept the good or bad qualities. You share similar values and beliefs and you see the person for who they really are.

****************

Infatuation says, "We must get married right away! I can't risk losing you!"

Love says, "Be patient. Do not panic. Plan your future with confidence. There are rewards in waiting."

அமல அனைக்கு நம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

 

அமல அனைக்கு நம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

அமல அன்னையே,/ எம் இறைவனின் தாயே,/  உம்மை எங்கள் இல்லங்களின் தலைவியாகவும்,/ அரசியாகவும் போற்றுகிறோம்./ எங்கள் குடும்பங்களுக்கு/ நீர் காட்டும் அன்பிற்கும்,/ அரவனைப்பிற்கும்/, செய்துவரும் சகல நன்மைகளுக்கும்/ உமது பாதம் பணிந்து நன்றி செலுத்துகிறோம்/.  எங்கள் குடும்பங்களில் உள்ள/ சகலரையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம்./ எம்மை ஆசீர்வதியும்./  பெற்றோர்களாகிய நாங்கள்/ திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு/ நாங்கள்/ ஒருவரை ஒருவர் நேசிக்கவும்,/ துன்பத்திலும்/ சோதனை நேரங்களிலும்/ ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும்,/ தாங்கிப்பிடிக்கும் துணையாகவும்/ இருக்க எங்களை ஆசீர்வதியும்./ எங்கள் அன்பாலும்,/ தியாகத்தாலும்/ நல்ல நடத்தையாலும்/ எங்கள் பிள்ளைகளுக்கு/ முன்மாதிரியாக இருக்க/ எங்களை வழிநடதும்./  இறைவனிடமிருந்து/ நீர் எங்களுக்கு பெற்றுத்தந்த/ பொக்கிஷமான/ எங்கள் குழந்தைகளுக்காக/ நாங்கள் உம் வழியாக/ இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்./  எங்கள் குழந்தைகளை நிறைவாய் ஆசீர்வதியும்./  அவர்கள் அறிவிலும்,/ ஞானத்திலும்,/ நற்பன்புகளிலும், இறைபக்த்தியிலும்/ வளரவும்,/ கல்வியிலும்/ ஆற்றல்களிலும் சிறந்துவிளங்கவும்/ உம்மை நோக்கி ஜெபிக்கிறோம்./ 

விண்ணக அரசியே,/ அருமையான என் அம்மாவையும்/ அப்பவையும்/ எனக்கு பெற்றோராய் கொடுத்தமைக்காய்/ உமக்கு நன்றி அம்மா./  அவர்கள்/ எங்களுக்கு காட்டிவரும்/ அன்பிற்கும், அளவுகடந்த பாசத்திற்கும்/ எங்களுக்காய் ஏற்றுக்கொண்ட துன்பங்கள்,/ செய்த தியாகங்கள்/ அணைத்தையும்/ நாங்கள் என்றும் மறவோம்./ அம்மா என் பெற்றோர்களுக்கு/ நீண்ட ஆயுளையும்,/ நல்லசுகத்தையும்/ உமது ஆசீரவாதமாய்/ அவர்களுக்கு அளித்தருலும்./ எனது அன்பாலும்/  சொல்லாலும்,/ செயலாலும்,/ நடத்தையாலும்/ அவர்களை என்றும் பெருமைப்படுத்துவேன்./  ஆவர்களின் முதிய வயதிலும்,/ சுகவீனத்திலும்/ நான் அவர்களுக்கு ஆறுதலாகவும்,/ துணையாகவும்,/ உதவியாகவும் இருக்க/ என்னைப் பக்குவப் படுத்தியருளும்./ 

 அனைத்து குடும்பங்களையும்/ உம் பாதத்தில் அற்பனிக்கிறோம்./  சிறப்பாக உம் திருமகன்/ பெரிதும் அன்புசெய்யும்/ இந்த பங்கில் உள்ள/ எல்லா சிறு பிள்ளைகளையும்/ உம் கரங்களில் ஒப்புவிக்கிறோம்./  அவர்களை ஆசீர்வதியும்./  அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும்,/ தெய்வபயத்தையும் வளரச்செய்தருளும்/. ஜீவியகாலதில் அவர்களுக்கு/ உற்ற துணையாய் வழிநடத்தும்./

அனைத்து குடும்பங்களும்,/ எங்கள் வாழ்வாலும்/, பிறர் அன்பு பணியாலும்/ உமது மான்புக்கும்,/ உம் திருக்குமாரனும்,/ எம் இறைவனுமான/ இயேசுக்கிறிஸ்துவின் தெய்வீகத்துகும்/ சாட்சிகளாய் வாழ்வோம்/ என்று உறுதியளிகின்றோம்./ எங்களை ஆசீர்வதியும்,/ வழிநடத்தும் அம்மா.