1 திமொத்தேயு 2 திமொத்தேயு தீத்து பிலமோன் வினாடி வினா

 1 திமொத்தேயு

1. விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை என்று பவுல் யாரை குறிப்பிடுகிறார்?

2. பவுல் மாசிதோனியாவுக்குப் போகும்போது திமொத்தேயுவை எங்கு இருக்கும்படி கேட்டுக் கொண்டார்?

3. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்காகக் பயன்படாமல், ஊக ஆய்வுகளுக்கே இடம் தருக்கூடியவை யாவை?

4. பவுல் கொடுத்த கட்டளையின் நோக்கம் என்ன?

5. திருச்சட்டம் யாருக்காக இயற்றப்பட்டது.

6. இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது என்று பவுல் குறிப்பிடும் கூற்று என்ன?

7. மனச்சான்றை உதறித் தள்ளிவிட்டதால் விசுவாசம் என்னும் கப்பல் உடைந்து போகச் செய்த இருவர் பெயர்கள் என்ன?

8. முதன்முதலில் பவுல் தரும் அறிவுரை என்ன?

9. நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமானது என்ன?

10. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவர் யார்?

11. கடவுள் பற்று உள்ளவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கு ஏற்ற அணிகலன்கள் என்ன?

12. பெண்கள் எவற்றில் நிலைத்திருந்தால் தாய்மைப் பேற்றின் வழியாக மீட்புப் பெறுவார்கள்?

13. சபைக் கண்காணிப்பாளராக இருப்பவரிடம் பவுல் எதிர்பார்க்கும் குணநலன்கள் யாவை?

14. திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராக இருக்கக்கூடாததன் காரணம் என்ன?

15. எல்லா வகையிலும் பயன் தரக்கூடியது எது?

16. நடை பிணங்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?

17. ஒருவர் கைம்பெண்ணாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டிய வயது என்ன?

18. இளம் கைம்பெண்கள் குறித்து பவுலின்  விருப்பம் என்ன?

19. ஒரு மூப்பருக்கு எதிரான குற்றச்சாட்டை, எத்தனை சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே என்று பவுல் அறிவுறுத்துகிறார்?

20. எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் எது?

2 திமொத்தேயு

21. திமொத்தேயுவின் தாய் பெயர் என்ன?

22. திமொத்தேயுவின் பாட்டி பெயர் என்ன?

23. பவுலை பன்முறை  உளம் குளிரப் பண்ணியவர் யார்?

24. பவுலிடமிருந்து விலகிய இருவர் பெயர் என்ன?

25. கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. சரியா? தவறா?

26. உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்ட இருவர் பெயர்கள் என்ன?

27. கடவுள் இட்ட அடித்தளத்தில் பொறிக்கப்பட்டுள்ள இரு வசனங்கள் யாவை?

28. மோசேயை எதிர்த்து நின்றவர்கள் யார்?

29. கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். சரியா? தவறா?

30. ………………….. அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது?

31. கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது எது?

32. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் செய்ய வேண்டியது என்ன?

33. உலகப்போக்கை விரும்பி பவுலை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றவர் யார்?

34. பவுல் யாரை எபேசுக்கு அனுப்பினார்?

35. துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த எவற்றையெல்லாம் எடுத்து வரவேண்டுமென்று பவுல் திமொத்தேயுவிடம் கூறுகிறார்?

36. பல தீமைகளைச் செய்தவன் பெயர் என்ன?


பொருத்துக


37. கிரேஸ் - தல்மாத்தியா

38. தீத்து - கலாத்தியா

39. எரஸ்து - மிலேத்து

40. துரோப்பிம் - கொரிந்து


தீத்து


41. பவுல் எந்த தீவில் அவர் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த விட்டுவிட்டு வந்தார்?

42. யார் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால், அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும்?

43. வயது முதிர்ந்த ஆண்கள் எவ்வாறு வாழ பவுல் அழைப்பு கொடுக்கிறார்?

44. வயது முதிர்ந்த பெண்கள் எவ்வாறு வாழ பவுல் அழைப்பு கொடுக்கிறார்?

45. மீட்பராம் கடவுளின் அருள் யாருக்கு வெளிப்பட்டுள்ளது?

46. கடவுள் எவ்வாறு நம்மை மீட்டார்?

47. எவற்றையெல்லாம் விலக்குமாறு பவுல் தீத்துவுக்கு கட்டளையிடுகிறார்?

48. யாரை தீத்துவிடம் அனுப்பும்போது அவர் நிக்கப்பொலி நகருக்கு வந்து சேரவேண்டுமென்று பவுல் விரும்புகிறார்?


பிலமோன்


49. பிலமோன் மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

50. பவுல் தன்னை ஏற்றுக் கொள்வது போல யாரை ஏற்றுக்கொள்ள பிலமோனிடம் வேண்டுகிறார்?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...