கொலோசையர் வினாடி வினா

 கொலோசையர்

1. விண்ணகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை யாவை?

2. கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?

3. ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து பவுலிடம் எடுத்துரைத்தவர் யார்?

4. எவற்றை செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும் என்று பவுல் விரும்புகிறார்?

5. எதற்காக மகிழ்ச்சியோடு, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்த பவுல் அழைக்கிறார்?

6. மகனால் படைக்கப்பட்டவை யாவை?

7. சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால், கடவுள் திருவுளம் கொண்டது என்ன?

8. ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் நம்மிடமிருந்து விரும்புவது என்ன?

9. பவுல் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் என்ன?

10. கிறிஸ்து …………………………. என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார்?

11. யாருக்காக பவுல் மிகவும் வருந்தி உழைக்கிறார்?

12. எச்செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன?

13. இறைத் தன்மையின் முழுநிறைவும் …………………………………ல் குடிகொண்டிருக்கிறது?

14. கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்கள் யார்?

15. கிறிஸ்துவே உண்மை. இவை எல்லாம், வர இருந்தவற்றின் வெறும் நிழலே என்று பவுல் குறிப்பிடுவது என்ன?

16. கிறிஸ்துவோடு இறப்போமாயின் எவற்றிலிருந்து விடுவிக்கப்படுகிறோம்?

17. இச்சையைத் தணிப்பதற்குப் பயன்படாதவைகள் யாவை?

18. கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் எவற்றை நாட வேண்டும்?

19. உலகப்போக்கிலான  இயல்புகள் என்று பவுல் குறிப்பிடுபவை யாவை?

20. நம் வாயினின்று வரக்கூடாதவை எவை?

21. புதுப்பிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் எவ்வகையான வேறுபாடில்லை என்று பவுல் குறிப்பிடுகிறார்?

22. கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாகிய நாம் எவற்றால் நம்மை அணிசெய்ய வேண்டும்?

23. அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்வது எது?

24. எவற்றை நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள் என்று பவுல் அழைக்கிறார்?

25. உங்கள் பேச்சு எப்பொழுதும்………………………...,…………………………இருப்பதாக!

26. திக்கிக்குடன் பவுல் அனுப்பி வைத்த மற்றொரு சகோதரர் யார்?

27. பவுலின் உடன் கைதி பெயர் என்ன?

28. பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் யார்?

29. லவோதிக்கேயா, எராப்பொலி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்காகவும் கடுமையாக உழைக்கிறவர் யார்?

30. ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேறி முடிக்கக் கவனமாயிருக்குமாறு பவுல் யாரிடம் சொல்லச்சொல்கிறார்?


1 தெசலோனிக்கர்


31. கடவுள்மீது தெசலோனிக்கத் திருச்சபை நம்பிக்கை கொண்டிருப்பது……………………………..., ………………………………..  மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது.

32. வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர் யார்?

33. தெசலோனிக்கத் திருச்சபையிடம் வருமுன்பே எந்நகரில் தாங்கள் துன்புற்றதாக பவுல் கூறுகிறார்?

34. போதனை என்னும் போர்வையில் தாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை. அதற்கு யார் சாட்சி என்று பவுல் கூறுகிறார்?

35. ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றவர்கள் யார்?

36. மனித இனத்திற்கே எதிரிகள் யார்?

37. பவுல் ஒருமுறை அல்ல, இருமுறை தெசலோனிக்கத் திருச்சபைக்கு வரத் திட்டமிட்டும் அவரை தடுத்தது யார்?

38. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளின் உடன் உழைப்பாளர் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?

39. தெசலோனிக்கத் திருச்சபையின் நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி பவுலிடம் கூறியவர் யார்?

40. கடவுள் நம்மை ………………………… அல்ல, …………………………….. அழைத்தார்?

41. ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், யாரை முந்திவிட மாட்டோம்?

42. கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது முதலில் உயிர்த்தெழுபவர்கள் யார்?

43. ஆண்டவருடைய நாள் எவ்வாறு வரும்?

44. எவற்றை மார்புக் கவசமாகவும், தலைச்சீராவாகவும் அணிந்துகொள்ள பவுல் அழைக்கின்றார்?

45. கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என்ன?


2 தெசலோனிக்கர்

46. தெசலோனிக்க திருச்சபைக்குரிய மடலை எழுதும் மூவரின் பெயர் என்ன?

47. ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து வெளிப்படும் போது நிகழுவது என்ன?

48. நெறிகெட்ட மனிதன் யாருடைய ஆற்றலால் வருவான்?

49. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் பவுல் கட்டளையிடுவது என்ன?

50. "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" – அதிகாரம் மற்றும் வசனம் குறிப்பிடுக?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...